இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி? அனுதாபம் காரணமா? - பாய்ண்ட்களை அடுக்கிய அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கிழக்கில் பெரிய வித்தியாசம் வர காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் பெரிய வித்தியாசத்துடன் முன்னிலை வகித்து வருகிறார். கடந்த முறையை விட மிக அதிக வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து திமுகவின் ஈரோடு தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் முத்துசாமி விளக்கியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் - 25033, அதிமுக - 8354, நாதக - 2005, தேமுதிக - 235 வாக்குகள் பெற்றுள்ளன.
திமுக கூட்டணி பெரிய வித்தியாசத்துடன் முன்னிலை வகிப்பது குறித்து, திமுகவின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிய அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.

இளங்கோவன் தொடர் முன்னிலை
ஈரோடு கிழக்குத் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் 25,033 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 8354, நாம் தமிழர் கட்சி 2005 வாக்குகளையும், தேமுதிக 235 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். கடந்த முறை சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையில், தற்போதே அந்த வித்தியாசத்தைக் கடந்து தொடர் முன்னிலை வகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

வாக்கு வித்தியாசம் தொடரும்
திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்ட திமுக அமைச்சர் முத்துசாமி இதுகுறித்துப் பேசியுள்ளார். அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசம் இப்படியே தொடரும் என்றுதான் தோன்றுகிறது. ஓரிரு இடங்களில் வாக்குகள் கூடவோ குறையவோ செய்யலாம். ஒரு நல்ல லீடிங் வரும் என்றுதான் கருதுகிறேன்.

களத்தில் ரெஸ்பான்ஸ்
நாங்கள் முக்கியமாக பேசியது 2, 3 விஷயங்கள்தான். திமுக அரசு மக்களுக்குச் செய்துள்ள நன்மைகள், திட்டங்கள் பற்றியே நாங்கள் எடுத்துரைத்தோம். அதில் மக்களுக்கு ஒரு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்பட்டது. நாங்கள் களத்திற்குச் செல்லும்போதே எதிர்க்கட்சியினர், எங்களிடம் என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் இதுவரை கொண்டு வந்த திட்டங்கள், இனி செயல்படுத்தப்போகும் விஷயங்களைச் சொன்னோம். அதற்கு களத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

திமுகவின் பெர்ஃபாமன்ஸ்
திமுக அரசின் பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளனர். திமுக மீதான மக்களின் நம்பிக்கை இந்த இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது. மேலும், எங்கள் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை, அந்த குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் இந்த பெரிய வித்தியாசத்துக்கு காரணம்.

அனுதாபம் காரணமா?
ஈரோடு மாநகராட்சியில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே தொடர்ந்து வந்தது. திருமகன் ஈவெரா இருக்கும்போதே நானும், அவரும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்து பல பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்தோம். இதெல்லாம் கண்ணுக்கு எதிரிலேயே மக்களுக்கு தெரிகிறது. திருமகன் ஈவெரா மீது மக்களுக்கு நல்ல எண்ணம் இருந்தது. ஆனால், அந்த அனுதாபம் காரணமாகவே இப்போது ஒட்டு போட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அடைத்து வைக்கவில்லை
நாங்கள் வாக்காளர்களை கூட்டி வந்து அடைத்து வைத்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். ஆனால், மக்களை அப்படி எல்லாம் அடைத்து வைத்து விட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், அதிமுகவினர் எங்கள் காரியாலயத்தில் இருந்தவர்களை வந்து அழைத்தார்கள். ஆனால், யாருமே போகவில்லை. நாங்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது அத்தனை மக்களும் வந்தார்கள். அவர்களை நாங்கள் அடைத்து வைத்தது உண்மையாக இருந்தால், ஓட்டு கேட்கும்போது அவர்கள் ஏன் வரப் போகிறார்கள்? எனவே, அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. சட்டப்பூர்வமாகவே, நாங்கள் வாக்கு சேகரித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே!












Click it and Unblock the Notifications