ஆர்.கே நகர் டோக்கன் பாணியில் அரங்கேறிய கள்ளக்காதல்... புதுசா இருக்கு, எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா!
Recommended Video

ஈரோடு : ரூ. 20 நோட்டில் செல்போன் எண்ணை பதிவிட்டு புழக்கத்தில் விட்ட ஈரோடு பெண்ணிற்கும் கோவையை சேர்ந்த இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடிக்கும் அளவு போயுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையத்தை சேர்ந்த மூர்த்தி கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி பால அளவையராக இருந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு 20 ரூபாய் நோட்டில் தன்னுடைய மொபைல் எண்ணை எழுதி வைத்து அதனை புழக்கத்தில் விட்டுள்ளார் வளர்மதி.
கோவை மாவட்டம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு இந்த இருபது ரூபாய் நோட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதிலிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு வளர்மதியிடம் செந்தில்குமார் பேசியுள்ளார். எதேச்சையாக செந்தில்குமார் வளர்மதியிடம் பேச நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தனிமையில் ஜாலி
இருவரும் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். வெளியூர் சென்று இருவரும் பலமுறை தனிமையிலும் இருந்துள்ளனர். குடும்பத்தினருக்குத் தெரியாமல் வளர்மதி செந்தில்குமாருடன் பழகி வந்துள்ளார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வளர்மதியிடம் செந்தில்குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்த வளர்மதி பின்னர் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி செந்தில்குமாருடன் வளர்மதி கோவை புறப்பட்டு சென்று விட்டார்.

போலீசில் சிக்கினார்கள்
இதனை அடுத்து வளர்மதியின் தாயார் அரச்சலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜல்லிப்பட்டி பகுதியில் செந்தில்குமார் வீட்டில் தங்கியிருந்த வளர்மதியை போலீசார் மீட்டனர். செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

என்னா டெக்னிக்கு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இருபது ரூபாய் நோட்டில் ரகசிய குறியீடு எண்ணை கொடுத்து அதனை வாக்காளர்கள் தேர்தல் முடிந்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஓட்டுக்கு பணம் தர அரங்கேறிய புது டெக்னிக் போல இருபது ரூபாய் நோட்டை வைத்து புது பாணியில் கள்ளக்காதல் விஷயம் அரங்கேறியுள்ளது. இதெல்லாம் பார்க்கும் போது என்னா மாதிரி புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications