தாளவாடியை கர்நாடகா உடன் இணைக்க வலியுறுத்தி கன்னட அமைப்பினர் தமிழக எல்லையில் போராட்டம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி தமிழக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கர்நாடகா மாநில போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் தாளவாடி, உதகை, ஒசூர் ஆகிய பகுதிகளை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

மொழி வாரி மாநிலம்
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் போது கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள மக்கள் வாழும் கிராமங்கள் பல தமிழகத்துடன் இணைக்கப்பட்டதாக கன்னட அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

கும்பாரகுண்டி
இந்நிலையில் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கர்நாடகத்துடன் சேர்க்க வலியுறுத்தி கன்னட சலுவளி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் உள்பட 40 ஆதரவாளர்கள் சத்தியமங்கலம்-மைசூர் எல்லையில், தமிழக-கர்நாடக எல்லையான கும்பாரகுண்டி பகுதிக்கு வந்தனர்.

வாட்டாள் நாகராஜ் அட்டூழியம்
தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் மற்றும் ஆதரவாளர்களை சாம்ராஜ் நகர் கிழக்கு போலீசார தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்திற்க எதிராக கோஷம் எழுப்பி அட்டூழியம் செய்தனர்.

நாகராஜ் கைது
இதையடுத்து கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட 40 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர். வாட்டாள் நகராஜ் ஏற்கனவே, தாளவாடி எல்லைக்கு வந்து, தமிழ் பெயர் பலகையை கிழித்து ரவுடித்தனம் செய்தார். மேலும் தாளவாடி மட்டுமல்லாமல் ஓசூரையும் கர்நாடகா உடன் இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications