நடுராத்திரி.. அம்மாவை கொன்று.. ரகசியமாக சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்த மகன்கள்.. ரூ.2 ஆயிரத்துக்காக
2 ஆயிரம் ரூபாய்க்காக தாயை கொன்று புதைத்த மகன்கள் கைதாகி உள்ளனர்
ஈரோடு: குடிக்க வெச்சிருந்த பணத்தில் அம்மா மளிகை சாமான் வாங்கிட்டாராம்.. அதனால் பெற்ற தாயை 2 மகன்கள் சேர்ந்து கொன்று, சுடுகாட்டில் கொண்டு போய் குழி தோண்டி புதைத்தே விட்டனர். ஈரோட்டில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் வஉசி நகரை சேர்ந்தவர் சரோஜா.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. ஒருவர் பெயர் விக்னேஷ், இன்னொருத்தர் பெயர் அருண்குமார்.. 2 பேரும் குடிகாரர்கள்.
இந்நிலையில், வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, சரோஜா மளிகை, காய்கறிகளை வாங்கி போட்டுள்ளதாக தெரிகிறது.. இதனால் நடுராத்திரி 2 மகன்களும் வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தேடி இருக்கிறார்கள்.

சரோஜா
பணம் இல்லை என்றதும் தூங்கி கொண்டிருந்த அம்மாவை எழுப்பி கேட்டுள்ளனர்.. அதற்கு சரோஜா, பணத்தை வீட்டு செலவுக்கு எடுத்துட்டேன் என்று சொல்லவும், 2 மகன்களுக்கும் ஆத்திரம் மண்டைக்கு ஏறிவிட்டது. அம்மா என்றும் பாராமல், நடுராத்திரி என்றும் பாராமல் ஆளுக்கு ஒரு பக்கம் சரோஜாவை தாக்க ஆரம்பித்தனர்.. பிறகு ஒரு இரும்பு கம்பியை எடுத்துவந்து சரோஜா மண்டையிலேயே போட்டனர்.

ஆம்புலன்ஸ்
இதில் மண்டை பிளந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.. இதை பார்த்ததும் 2 பேருக்கும் பயம் வந்துவிட்டது.. அதனால், உடனடியாக ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றனர். நடந்த இந்த சம்பவம் அத்தனையையும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே இருந்தனர்.. ஆனால் ஆஸ்பத்திரிக்கு போன சரோஜா திரும்பி வரவே இல்லை.

இரும்பு கம்பி
அதனால், அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியாததால் சிலர் ஈரோடு தெற்கு போலீசாருக்கு விஷயத்தை சொன்னார்கள். அதன்பேரில் போலீசார் 2 மகன்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் அந்த பகீர் விஷயத்தை சொன்னார்கள். இரும்பு கம்பியால் மண்டையை பிளந்தபோதே சரோஜாவுக்கு உயிர் போய்விட்டதாம்..

சுடுகாடு
அதன்பிறகு உடம்பு சரியில்லாத மாதிரி வெளியில் காட்டி கொள்ளவே ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்தாகவும், ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகாமல் நேராக சுடுகாட்டுக்கு போனதாகவும் கூறினர். பின்னர். சுடுகாட்டிலேயே ஒரு குழியை தோண்டி அம்மாவின் சடலத்தை புதைத்துவிட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சுடுகாட்டுக்கு சென்று, புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கைது
வெறும் 2 ஆயிரம் பணத்துக்காக, அதுவும் குடிக்க பணம் இல்லாததால் பெற்ற தாயை மகன்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் ஈரோடு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தள்ளது.. இந்த நாசமா போன குடி இன்னும் என்னென்ன செய்ய போகுதா? எத்தனை உயிரை காவு வாங்க போகிறதோ?!
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications