ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே நன்றி அறிவிப்பு! ஈரோட்டில் 4 வார்டுகளை சுற்றி வந்த அன்பில் மகேஷ்!
முதல் ஆளாக வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்த 4 வார்டுகளிலும் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு 4 வார்டுகளையும் சுற்றி வந்தார்.
தேர்தலில் ஜெயித்தோமோ ஈரோட்டில் இருந்து மூட்டையை கட்டினோமா என்றில்லாமல் வாக்களித்த மக்களுக்கு உடனடியாக நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிமுக வாக்கு வங்கி அதிகம் உள்ள 20,21,22,23 ஆகிய 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனை ஒரு தனிப்பட்ட சேலஞ்சாக எடுத்துக்கொண்டு முழுமையாக அங்கேயே முகாமிட்டு தீவிர களப்பணியாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷும் அவரது டீமும் இளங்கோவனை மேற்கண்ட 4 வார்டுகளில் மட்டும் 1117 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற வைத்தது.

சுடச்சுட நன்றி
இதனிடையே நேற்று தேர்தல் முடிவுகள் வெளி வந்துகொண்டிருக்கும் போதே ஈரோடு சென்றடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ், தாம் தேர்தல் பணியாற்றிய 4 வார்டுகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவ்வளவு சீக்கிரமாக நன்றி தெரிவிக்க அமைச்சர் வருவார் என்பதை எதிர்பார்க்காத சூரியம்பாளையம் மற்றும் அன்னை சத்யா நகர் பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் அன்பில் மகேஷை வரவேற்றனர்.

விரைவில் தீர்வு
ஓட்டுக்கேட்டு சென்ற போது தன்னிடம் பொதுமக்கள் முன் வைத்த கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்ற உறுதியையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்தார். இவருடன் அமைச்சர் முத்துசாமியும் இந்த நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். வேறு எந்த அமைச்சரும் சீனியர் அமைச்சர்கள் உட்பட அன்பில் மகேஷை போல் நன்றி தெரிவிக்க இன்னும் ஈரோடு செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெரிய டீம்
தேர்தலில் ஜெயித்தோமோ ஈரோட்டில் இருந்து மூட்டையை கட்டினோமா என்றில்லாமல் வாக்களித்த மக்களுக்கு உடனடியாக நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷுடன் திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெரிய டீம் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications