ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே நன்றி அறிவிப்பு! ஈரோட்டில் 4 வார்டுகளை சுற்றி வந்த அன்பில் மகேஷ்!

முதல் ஆளாக வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்த 4 வார்டுகளிலும் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு 4 வார்டுகளையும் சுற்றி வந்தார்.

தேர்தலில் ஜெயித்தோமோ ஈரோட்டில் இருந்து மூட்டையை கட்டினோமா என்றில்லாமல் வாக்களித்த மக்களுக்கு உடனடியாக நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிமுக வாக்கு வங்கி அதிகம் உள்ள 20,21,22,23 ஆகிய 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனை ஒரு தனிப்பட்ட சேலஞ்சாக எடுத்துக்கொண்டு முழுமையாக அங்கேயே முகாமிட்டு தீவிர களப்பணியாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷும் அவரது டீமும் இளங்கோவனை மேற்கண்ட 4 வார்டுகளில் மட்டும் 1117 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற வைத்தது.

சுடச்சுட நன்றி

சுடச்சுட நன்றி

இதனிடையே நேற்று தேர்தல் முடிவுகள் வெளி வந்துகொண்டிருக்கும் போதே ஈரோடு சென்றடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ், தாம் தேர்தல் பணியாற்றிய 4 வார்டுகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவ்வளவு சீக்கிரமாக நன்றி தெரிவிக்க அமைச்சர் வருவார் என்பதை எதிர்பார்க்காத சூரியம்பாளையம் மற்றும் அன்னை சத்யா நகர் பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் அன்பில் மகேஷை வரவேற்றனர்.

விரைவில் தீர்வு

விரைவில் தீர்வு

ஓட்டுக்கேட்டு சென்ற போது தன்னிடம் பொதுமக்கள் முன் வைத்த கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்ற உறுதியையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்தார். இவருடன் அமைச்சர் முத்துசாமியும் இந்த நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். வேறு எந்த அமைச்சரும் சீனியர் அமைச்சர்கள் உட்பட அன்பில் மகேஷை போல் நன்றி தெரிவிக்க இன்னும் ஈரோடு செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெரிய டீம்

பெரிய டீம்

தேர்தலில் ஜெயித்தோமோ ஈரோட்டில் இருந்து மூட்டையை கட்டினோமா என்றில்லாமல் வாக்களித்த மக்களுக்கு உடனடியாக நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷுடன் திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெரிய டீம் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+