லாக்டவுன் நாளில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஞாயிற்றுகிழமையான இன்று முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈரோடு பவானி கூடுதுறையில் நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் இந்த நாளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு போய் காவிரியில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. குலதெய்வ கோவிலுக்கு புனித நீர் எடுப்பதற்காகவே தான் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்ததாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமத்தை சேர்ந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

லாக்டவுன் உள்ள இந்த நாளில் அமைச்சருக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதாகவும், கோவில் பின் வாசல் வழியாக நுழைந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்ததாகவும் செய்திகள் பரவின.
காவிரி,பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில், போலீஸ் பாதுகாப்புடன் அவர் புனித நீராடி சென்றதாகவும் வீடியோவுடன் செய்தி வெளியானது. தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், அமைச்சரின் நடவடிக்கையால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் தென்னகத்தின் காசி என்றழைக்கக்கூடிய பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தான் வந்தது ஏன் என்று அவரே விளக்கம் கொடுத்துள்ளார். சிவகாசியை அடுத்த மூளிப்பட்டியில் உள்ள தங்களது குலதெய்வமான சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீரை எடுக்க வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பெரிய கோவில்கள் ஏதும் திறக்கப்படவில்லை. சிறிய கோவிகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய கோவிகளில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விதிகளை மீறி அமைச்சர் புனித நீராடியதோடு கோவிலில் தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக மஞ்சள் ஆடையுடன் வலம் வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இது குல தெய்வ கோவில் கும்பாபிஷேகத்திற்காக விரதம் இருக்கிறாரா? அல்லது குரு அருள் வேண்டி இருக்கும் விரதமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications