அப்பா இறந்துட்டாரு.. கோவையில் இருந்து வந்த தகவல்.. அந்த நிலையிலும் நெகிழ வைத்த அமைச்சர் சாமிநாதன்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தந்தை இறந்த நிலையிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றதை கண்டு பொதுமக்கள் நெகிழ்ந்து போனார்கள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரைச் சேர்ந்த பெருமாள்சாமி (94) தங்கமணியின் மகன் தான் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதனின் தாயார் தங்கமணி இறந்துவிட்டார்.

இந்நிலையில் தந்தை பெருமாள் சாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சமீப நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று காலை பெருமாள் சாமி காலமானார்.
இதனிடையே ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நேற்று கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, முருங்கத்தொழுவு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவையில் வயது முதிர்வு காரணமாக அமைச்சரின் தந்தை பெருமாள்சாமி கவுண்டர் நேற்று காலை உயிரிழந்த தகவலை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சரை தொடர்பு கொண்ட திமுக நிர்வாகிகள், '300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் விழா நடக்கும் அரங்குக்கு வந்து விட்டனர். எனவே அரசு அதிகாரிகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் உங்கள் தந்தையின் இறுதி சடங்கை கவனியுங்கள்' என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்..
ஆனால் அதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மறுத்துவிட்டார். மேலும் தான் உறுதியளித்தபடி சென்னிமலை பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பிறகுதான் தந்தையின் இறுதி சடங்குக்கு செல்வேன்' என்று கூறியிருக்கிறார். அதன்படியே சென்னிமலை பகுதியில் நடந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டிருக்கிறார்.
பெண் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்க நாணயங்களை தன் கையால் வழங்கிய அமைச்சர் சாமிநாதன் அதன் பின்னரே சொந்த ஊரான முத்தூருக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது ஒருபுறம் எனில் அமைச்சர் சாமிநாதன் விழாவை முடித்துவிட்டு சென்ற பிறகு தான் விழாவில் பங்கேற்ற பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சரின் தந்தை காலையில் உயிரிழந்த விஷயம் தெரிய வந்தது. இது பார்த்து பொதுமக்கள் நெகிழ்ந்து போனார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications