Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக்கில் விரைவில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதி:அமைச்சர் முத்துசாமி கொடுத்த மேஜர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூத்த அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் விவகாரத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களையும் குறைபாடுகளையும் களைவதற்கும் முனைப்பு காட்டி வருகிறார். குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று கூறினார்.

Online payment facility at Tasmac shops soon: Minister Muthusamy

டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மது விற்பனையில் நிர்வாகத்தின் மீது வரும் புகார்கள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசித்து வருகிறார். விரைவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இது தொடர்பாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- டாஸ்மாக் மதுபான கடைகளில் மாற்றங்களை கொண்டு வர 2 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

Online payment facility at Tasmac shops soon: Minister Muthusamy

18 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இந்த வசதியை அமல்படுத்த தொழில் நுட்ப கருவிகள் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால், கால அவகாசம் தேவைப்படுகிறது" என்றார். டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து உள்ள சூழலிலும், இன்னும் கூட சில இடங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவது நீடிப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழாமல் இல்லை. எனவே, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்களுக்கு பெருமளவு தீர்வு காணப்படும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+