டாஸ்மாக்கில் விரைவில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதி:அமைச்சர் முத்துசாமி கொடுத்த மேஜர் அப்டேட்
ஈரோடு: டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூத்த அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் விவகாரத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களையும் குறைபாடுகளையும் களைவதற்கும் முனைப்பு காட்டி வருகிறார். குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று கூறினார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மது விற்பனையில் நிர்வாகத்தின் மீது வரும் புகார்கள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசித்து வருகிறார். விரைவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இது தொடர்பாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- டாஸ்மாக் மதுபான கடைகளில் மாற்றங்களை கொண்டு வர 2 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

18 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இந்த வசதியை அமல்படுத்த தொழில் நுட்ப கருவிகள் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால், கால அவகாசம் தேவைப்படுகிறது" என்றார். டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து உள்ள சூழலிலும், இன்னும் கூட சில இடங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவது நீடிப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழாமல் இல்லை. எனவே, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்களுக்கு பெருமளவு தீர்வு காணப்படும் என தெரிகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications