“தீபம் ஏற்றச் சொன்னால் ஏற்றி விடலாமே.. தமிழக அரசு உச்சநீதிமன்றம் போக வேண்டியதில்லை!” - சீமான்
ஈரோடு: திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செல்ல வேண்டியதில்லை என்றும், தீபம் ஏற்ற சொன்னால் ஏற்றிவிட வேண்டியதுதானே எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. தீபம் ஏற்றச் சொன்னால் ஏற்றி விடலாமே. தர்காவில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் உரிமை, விளக்கு ஏற்றுவதற்கும் இருக்கிறது. அவரவர் வழிபாட்டு உரிமை அவரவர்களுக்கு உள்ளது. இரு மத பெரியவர்களை அழைத்து வழிபாடு குறித்து பேசித் தீர்த்திருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

அதாவது, "நீதிமன்றம் உத்தரவிட்டால் விளக்கை ஏற்ற வேண்டியதுதானே? உங்களுக்கு இறை வழிபாட்டின் மீது நம்பிக்கை இல்லை என்றால் என்ன செய்வது? நான் முருகன் வழிபாட்டை முன்னெடுத்த போது, என்னை இழிவாக முரசொலியில் கட்டுரை எழுதி விமர்சித்து இருந்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் முருகன் மாநாட்டை நடத்தினீர்கள்?
விளக்கேற்றுகிற உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதே தற்போதைய கேள்வி. திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபட உரிமை இருப்பதைப் போல.. முருகனுக்காக விளக்கேற்றுவதற்கும் உரிமை இருக்கிறது. அவரவர் வழிபாட்டு உரிமையை, அவர் அவருக்கு வழங்க வேண்டும்.
உன் மதம் சிறந்தது எனில் வழிப்படு. என் மதம் சிறந்தது வழிவிடு. இதுதான் கோட்பாடாக இருந்திருக்க வேண்டும். பிரச்சனை வரக்கூடாது எனில், இரு மதங்களின் உடைய பெரியவர்களை அழைத்து.. அவரவர் வழிபாட்டை மற்றவர் தலையீடு செய்யக்கூடாது என்று பேசி திருத்திருக்க வேண்டும். விளக்கேற்ற வேண்டுமென்றால் அறநிலையத்துறை துணை நின்றிருக்க வேண்டும். சிக்கந்தர் தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி விழா நடத்துகிறார்கள் என்றால்.. அரசு துணை நிற்க வேண்டும். இப்படித்தான் அரசு இந்திருக்க வேண்டும்.
திமுக தேர்தலுக்காக திட்டமிட்டு இந்த பிரச்சினையை பெரிதாக்குகிறது. இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று, திமுக விரும்புகிறது. தந்தூரி விழாவின் போது உயிர்பலி கூடாது என்று, இந்து சமய அறநிலையத்துறை கூறியதால்தான் இந்த பிரச்சனையை உருவானது. தேர்தல் அரசியலுக்காக திமுக இஸ்லாமிய வாக்குகளையும், பாஜக இந்துக்களின் வாக்குகளையும் மையப்படுத்தி அரசியல் செய்கிறது" என்று கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications