Sengottaiyan: இந்தமுறையும் மிஸ் ஆகாது.. கோபியில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்
ஈரோடு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை தேர்தல் போட்டியை கடுமையாக்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தவெக கொங்கு மண்டல அரசியல்
நடிகர் விஜய் தவெக கட்சியின் முதல் மாநாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு. கூட்டணி ஆட்சி என்கிற திரியை கிள்ளி போட்டார். தற்போதுவரை விஜய் கட்சியுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. அதேநேரத்தில் தாங்கள் இருக்கிற கூட்டணியில் விஜய் பெயரை சொல்லி பேரத்தை அதிகரிக்கும் வியூகத்தை கடைபிடிக்கிறார்கள்.
அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்துள்ளனர். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தவெகவிற்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அந்தக் கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் பிரச்சாரம்
செங்கோட்டையன், அருண் ராஜ் என அந்தக் கட்சியின் முக்கிய முகங்கள் பலர் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல செங்கோட்டையனும் கோபிசெட்டிப்பாளையத்தில் பிரச்சாரம் தொடங்கிவிட்டார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். தவெகவில் இணைவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 2026 தேர்தலிலும் செங்கோட்டையன் கோபி தொகுதியில் தான் போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகள் ஷாக்
இன்று காலை அதிகாரபூர்வமாக கோபி தொகுதியில் அவர் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார். பொது மக்களுக்கு லட்டு கொடுத்து தனக்கு விசில் சின்னத்தில் ஆதரவளிக்குமாறு வாக்கு சேகரித்தார். தேர்தல் மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன்னதாகவே செங்கோட்டையன் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அந்தப் பகுதியில் உள்ள திமுக, அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications