வாழைப்பழம் சாப்பிட்ட ஈரோட்டு சிறுவன்.. உணவு குழாயில் இருந்து தவறி மூச்சுக் குழாய்க்குள் சென்றதா?
ஈரோடு: ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது. தற்போது சிறுவனுடைய உடல் பிரதே பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மகனின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது. என்ன நடந்தது சிறுவனுக்கு?
ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி மாணிக்கம்-மகாலட்சுமி.. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் சாய்சரண் மற்றும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.. எனவே குழந்தைகள் இருவரையும் அவர்களது பாட்டி வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.
வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன்
அந்தவகையில், நேற்றைய தினமும் தம்பதி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்கள்.. அப்போது இரவு நேரம், சிறுவன் சாய் சரண் விளையாடி கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளான்.. வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்தபோதே சாய் சரணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி, உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சாய்சரணை அழைத்து சென்றுள்ளார்.. ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துவிட்டனர். இதையடுத்து, தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
என்ன நடந்தது?
சிறுவன் வாழைப்பழத்தை எடுத்து, சாப்பிடும்போது, அதை விழுங்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளான்.. உடனே இருமல் வந்து, புரையேறி விட்டது.. உடனே வாழைப்பழம் உணவுக்குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்து கொண்டதாம்.. இதனால் நுரையீரலுக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைப்பட்டுள்ளது.. சிறுவனுக்கு மூச்சுவிட முடியாமலும் போயுள்ளது.. அதற்கு பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.
எனவே, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருக்கிறது, நிலைமையும் மோசமாக உள்ளது. அதனால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அரசு டாக்டர்கள் அறிவுரை
அதற்கு பிறகே அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது.. இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கடித்துவிட்டது. பிறகு சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை டாக்டர்கள் அகற்றினார்கள்..
சிறுவன் உயிரிழப்பு குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சொல்லும்போது, "சாய்சரணை மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பே உயிர்போயிருந்தது. வாழைப்பழம் மூச்சுக்குழாயை அடைத்த 5 நிமிடத்தில் உயிர் போயிருக்க வாய்ப்புள்ளது.. எப்போதுமே குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை தரும்போது, சிறிய துண்டுகளாக வெட்டி தர வேண்டும்.
ஒருவேளை ஏதாவது சாப்பிடும்போது இதுபோல மூச்சுத்திணறல் ஏற்பட்டால், நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்றாக தாழ்த்தி பிடித்து, முதுகில் வேகமாக தட்ட வேண்டும்.. அப்படி தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வரக்கூடும்" என்றனர்.
ஈரோட்டில் 5 வயது சிறுவன், மூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது..
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications