Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு பெருந்துறையில் மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த யோகநாதன்.. இப்படியாக ஆகணும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூர் ஊராட்சி பகுதியில் சாலையில் சிறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஓட்டுநர் யோகநாதன் என்பவர் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்காவுக்கு உட்பட்ட ஓடைக்காடு குன்னம்பதியை சேர்ந்த ஓட்டுநர் யோகநாதன். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, தனது தங்கையை பார்த்துவிட்டு கிணிப்பாளையம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10- மணிக்கு ஓட்டுனர் யோகநாதன் சென்றுள்ளார்.

What happened to the unsafe pit at the bridge construction site near Perundurai Erode

அப்போது நெட்டச்செல்லாம்பாளையம் பகுதி வழியாக கணிப்பாளையம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் எந்தவித தடுப்புகளும் இல்லாமல் சிறு பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் ஓட்டுநர் யோகநாதன் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறு பாலம் கட்டும் குழியிலேயே உயிரிழந்து உள்ளார்.

அவ்வழியாக சென்ற கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் ஐந்து இடங்களில் சிறு பாலம் கட்டுமான பணிகள் மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பிரகாஷ் என்பவர் எடுத்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்ற எச்சரிக்கை பலகை மற்றும் பேரி கார்ட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த விபத்து நிகழ்ந்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுனர் யோக நாதனுக்கு ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை அருகே சிறு பாலம் கட்டுமான பணியின் போது எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் ஓட்டுநர் பாலம் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+