ஈரோடு பெருந்துறையில் மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த யோகநாதன்.. இப்படியாக ஆகணும்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூர் ஊராட்சி பகுதியில் சாலையில் சிறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஓட்டுநர் யோகநாதன் என்பவர் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்காவுக்கு உட்பட்ட ஓடைக்காடு குன்னம்பதியை சேர்ந்த ஓட்டுநர் யோகநாதன். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, தனது தங்கையை பார்த்துவிட்டு கிணிப்பாளையம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10- மணிக்கு ஓட்டுனர் யோகநாதன் சென்றுள்ளார்.

அப்போது நெட்டச்செல்லாம்பாளையம் பகுதி வழியாக கணிப்பாளையம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் எந்தவித தடுப்புகளும் இல்லாமல் சிறு பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் ஓட்டுநர் யோகநாதன் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறு பாலம் கட்டும் குழியிலேயே உயிரிழந்து உள்ளார்.
அவ்வழியாக சென்ற கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் ஐந்து இடங்களில் சிறு பாலம் கட்டுமான பணிகள் மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பிரகாஷ் என்பவர் எடுத்து செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்ற எச்சரிக்கை பலகை மற்றும் பேரி கார்ட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த விபத்து நிகழ்ந்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுனர் யோக நாதனுக்கு ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெருந்துறை அருகே சிறு பாலம் கட்டுமான பணியின் போது எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் ஓட்டுநர் பாலம் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications