இளம் வயதில் துயர முடிவு.. கணவருக்கு இதய நோய்..வேதனையில் கணவருடன் மனைவி தற்கொலை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று, கணவருக்கு வந்த இதயநோயால் மனம் உடைந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயராஜ். 27 வயதாகிறது. இவருக்கு இதய நோய் இருந்தது. இவரது மனைவி பெயர் கெளதமி. இவருக்கு 23 வயதாகிறது.
இதய நோய் சிகிச்சைக்காக பல ஊர்களுக்கும் போய் பார்த்தனர். இருப்பினும் விஜயராஜின் பிரச்சினை தீரவில்லை. இதையடுத்து ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார் விஜயராஜ். அதில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்துள்ளது. இதையடுத்து மீண்டும் வீடு திரும்பினார் விஜயராஜ். ஆனால் அங்கு போன பின்னர் மீண்டும் சுகவீனம் அடைந்தார்.
இதையடுத்து மறுபடியும் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருடன் மனைவி கெளதமி, தாயார் தேவகி ஆகியோர் தங்கியிருந்தனர். புதன்கிழமையன்று தேவகி அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். அறைக்குள் விஜயராஜும், கெளதமியும் இருந்தனர். சற்று நேரத்தில் கதவைப் பூட்டியுள்ளனர். பின்னர் கதவு திறக்கவேயில்லை.
இதனால் சந்தேகமடைந்த தேவகி, நர்ஸ்களிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து கதவைத் தட்டிப் பார்த்தனர். பின்னர் அறையின் பின்பக்கம் உள்ள கதவைத் திறந்து உள்ளே போய்ப் பார்த்தபோது விஜயராஜும், கெளதமியும் வாயில் நுரை தள்ளியபடி காணப்பட்டனர். அரை மயக்கத்தி்ல அவர்கள் இருந்தனர். இதையடுத்து டாக்டர்கள் விரைந்து வந்து அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால் அது பலன் தரவில்லை, இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிள் பழத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து இருவரும் சாப்பிட்டுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications