அதிர்ச்சி..ஈரோட்டில் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்து தீப்பிடித்த குடிசை.. உடல் கருகி தொழிலாளி பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரவில் செல்போன் சார்ஜ் போடப்பட்ட நிலையில் திடீரென்று வெடித்து குடிசை தீப்பிடித்தது. இதில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
Recommended Video
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று இரவு குடிசை வீட்டில் தூங்கும் போது சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்ததில் ஒருவர் தூங்கும்போது உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கூலமூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34). பிஏ பட்டதாரி. இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கஸ்தூரி (32).
வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்து வீடு திரும்பினார். அதன்பிறகு வீட்டில் மனைவி கஸ்தூரி தூங்கவே அர்ஜூன் தனது வீட்டில் அருகே உள்ள குடிசை வீட்டில் இரவில் தூங்க சென்றார்.

செல்போன் வெடித்து தீ விபத்து
அர்ஜூன் தூங்க சென்ற வீடானது இரும்பு தகரம் மற்றும் தென்னை ஓலைகளால் ஆனாது. இதையடுத்து அங்கு அவர் தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கினார். இந்த வேளையில் திடீரென்று சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்து சிதறியது. இதையடுத்து மின்கசிவு ஏற்பட்டு குடிசை தீப்பற்றி எரிந்தது.

தீயில் சிக்கிய இளைஞர்
இதனால் தீயில் சிக்கி கொண்ட அர்ஜூனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு கண்விழித்த மனைவி கஸ்தூரி கணவர் அர்ஜூன் தீயில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரினார். கணவரை காப்பாற்றும்படி கதறினார்.

உடல் கருகி பலி
இதையடுத்து அங்கு வந்தவர்கள் குடிசை வீட்டில் பிடித்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் அதற்குள் அர்ஜூன் பரிதாபமாக உடல் கருகி இறந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
இதுபற்றிய அர்ஜூனின் மனைவி கஸ்தூரி சிருவாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்து ஏற்பட்ட மின்கசிவால் குடிசை தீப்பிடித்து இளைஞர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications