உங்களின் சிறு உதவி இதய நோயால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தையின் உயிர் காக்க உதவும்.. ப்ளீஸ்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 வயது குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறிய உதவி கூட பெரிய பலனை கொடுக்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் திருமணமானது. இவருடைய மனைவி பெயர் சந்தியா. சுபாஷ் ஒரு கூலி தொழிலாளி. திருத்தணியில் உள்ள செங்கல் சூளையில் லாரியில் லோடு ஏற்றும் வேலையை செய்து வருகிறார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.300 கூலியாக கிடைக்கிறது. இப்படி என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும், இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே சந்தோஷம் இவர்களுடைய குழந்தைகள்தான். சுபாஷ்-சந்தியாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

கடைக்குட்டி ஜான்சீனா ஒரு வருடத்திற்கு முன்னர்தான் பிறந்தார். ஆனால் இவர் பிறந்த சில நாட்களிலேயே கடும் நெருக்கடிகளை சந்தித்தார். அதாவது, ஜான்சீனாவுக்கு தீவிரமான மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. திடீரென நள்ளிரவில் காரணமே இல்லாமல் அழும் ஜான்சீனாவை சுபாஷ், சந்தியாவால் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மனவேதனை இருக்கும். எனவே அவர்கள் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்துகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். இப்படி இருக்கையில் எதிர்பாராத விதமாக தனியார் மருத்துவர்களை சந்திக்க நேர்ந்த போது குழந்தையின் இதயத்தில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் இதனை ஆப்சென்ட் பல்மோனரி வால்வ் சிண்ட்ரோம் (TOF) என்று கூறியுள்ளனர். இது பிறக்கும் போதே ஏற்படும் ஒரு வகை இதய பிரச்னையாகும். இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாகும்.

இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3.50 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒரு கூலி தொழிலாளியால் இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து திரட்ட முடியும்? எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த குழந்தைக்காக உதவுங்கள். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியமாகும். அதேபோல சிறிய உதவி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே தாமதிக்காமல் குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்.












Click it and Unblock the Notifications