ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனி: ரத்து செய்யக்கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மன நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐசிஎல் - ஐபிஎல்லின் முன்னோடி
இந்தியாவில் ட்-20 கிரிக்கெட் தொடங்கியவுடன் ஐசிஎல் கிரிக்கெட் என்கிற ஒன்றை கபில்தேவ் ஆரம்பித்தார். இன்றைய ஐபிஎல்லின் ஆர்ம்பம் இதுதான். கபில்தேவ் ஆரம்பித்த கான்செப்டை பிடித்துக்கொண்ட பிசிசிஐ ஐபிஎல் என்பதை தொடங்கியது. இதனால் கபில்தேவில் ஐசிஎல் முடிவுக்கு வந்தது.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஐபிஎல் போட்டிகள்
பிசிசிஐ ஐபிஎல்லை நடத்தினாலும் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை பெரும் செல்வந்தர்கள் எடுத்து அவர்கள் வீரர்களை ஏலத்தில் எடுத்து நடத்துகிறார்கள். உலகில் பல நாடுகள் இவ்வகையான போட்டிகளை நடத்தினாலும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லுக்கு ரசிகர்கள் அதிகம் அதனால் வருமானமும் அதிகம் என்பதால் அதில் பங்கேற்க வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள்
ஐபிஎல் அணிகளில் புகழ்பெற்ற அணி சிஎஸ்கே அணி ஆகும் காரணம் அதன் கேப்டன் தோனி ஆவார். சென்னையின், தமிழக மக்களின் அணிபோல் சிஎஸ்கே ஆகிப்போனது. ஐபிஎல் ஆரம்பித்த சில ஆண்டுகளில் சூதாட்ட பிரச்சினை எழுந்தது. 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதே தொடரில் விளையாடிய ராஜஸ்தானை ராயல்ஸ் அணிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை இரண்டு அணிகளும் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது.

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014 ஆம் அண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனு தள்ளுபடி
தோனியின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இந்த வழக்கில், தற்போது சாட்சி விசாரனை தொடங்கியுள்ள நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சாட்சி விசாரணை எதிர் கொள்ள வேண்டும் என சம்பத் குமாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
-
இதுதான்டா ஷேன் வார்னே.. உயிரிழந்த பின்பும் ரூ.460 கோடி வருமானம்.. RR அணி விற்பனையால் நடந்த சம்பவம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications