தோல்வியில் முடிந்த பெங்களூர் எதிர்ப்பு! ஓசூர் ஏர்போர்ட்.. தமிழக அரசுக்கு AAI தந்த முக்கிய ரிப்போர்ட்
ஓசூர்: ஓசூர் விமான நிலையம் தொடர்பான இறுதி சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் AAI சமர்ப்பித்துள்ளது. அடுத்த கட்டமாக தளத்தை இறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுதல் ஆகியவை அடங்கும். விரைவில் இந்த ஒப்புதல்கள் பெறப்பட்டால் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎம்ஆர் செஸ் நிலத்தில் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் கிராமம் அல்லது தனேஜா ஏரோஸ்பேஸ்+ அருகே ஓசூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரம் வர உள்ளதாம். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு தளங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளது.
அடுத்த கட்டமாக வான்வெளியைக் கண்டறிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முடித்த பின்னரே, விமான நிலையம் அமைக்க ஒரு தளத்தை தேர்வு செய்ய முடியும். கடந்த அக்டோபரில், ஐந்து இடங்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்பின் இந்த 5 இடங்களின் நன்மை தீமைகளையும் எடைபோட்டு, சாத்தியக்கூறு அறிக்கையின் முதல் வரைவை AAI மாநில அரசுக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து, அந்த 5 இடங்களில் இருந்து அரசாங்கம் இரண்டு தளங்களைத் தேர்ந்தெடுத்தது.

ஒன்று தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) ஏர்ஸ்ட்ரிப்பில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் மற்றொன்று உலகம் என்ற பகுதிக்கு அருகே (ஓசூருக்கு கிழக்கு மற்றும் சூளகிரிக்கு வடக்கே) 15.5 கிமீ தொலைவிலும் உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழக அரசு உறுதி செய்ய உள்ளதாம். ஏப்ரல் இறுதிக்குள் இடம் உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஏற்கனவே ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதில் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அளித்த பதிலில், நாங்களும் உதவி செய்துவருகிறோம். எனினும், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ சுற்றளவில் வேறு விமான நிலையம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தம் சவாலாக உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு, விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கவேண்டும். கண்டிப்பாக நாங்கள் பாஸிடிவ் அணுகுமுறை எடுப்போம், என்று கூறி உள்ளார்.
ஓசூர் ஏர்போர்ட் இடம் தேர்வு
ஏற்கனவே ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2 இடங்களை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. முதலில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 இடங்களாக அவை குறைக்கப்பட்டு உள்ளது. ஓசூர் விமானம் நிலையம் அமைப்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
AAI ஆல் ஆய்வு செய்யப்பட்ட ஐந்து தளங்களில், ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) க்கு சொந்தமான தனியார் விமான ஓடுதளமும் அடங்கும். பெங்களூருக்கு அருகே அமைந்துள்ள தொழில்துறை நகரமான ஓசூரில் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப படிகளில் இதுவும் ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications