Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஷ்டியை முறுக்கும் பெங்களூர்! ஓசூர் விமான நிலையம் தள்ளிப்போகிறதா? தமிழ்நாட்டின் பிளானுக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான ஓசூர் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் UDAN மண்டல இணைப்புத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ள திட்டங்களின் பட்டியலில் முன்மொழியப்பட்ட ஓசூர் விமான நிலையம் சேர்க்கப்படவில்லை. இதனால் மத்திய அரசின் நேரடி நிதி இதில் கிடைக்காது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த விளக்கத்தின்படி, பெங்களூர் விமான நிலையத்தின் ஒப்பந்தமே காரணம் என்று கூறப்படுகிறது. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (BIAL) நிறுவனத்துடன் செய்துள்ள சலுகை ஒப்பந்தத்தில் உள்ள ஒரு விதி, 2033 ஆம் ஆண்டு வரை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய விமான நிலையங்களை உருவாக்குவதற்குத் தடை விதிக்கிறது. ஓசூர் இந்த தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வருகிறது.

ஓசூர் தடை செய்யப்பட்ட பகுதி

இந்த தடைகளைக் கடந்து, தமிழ்நாடு அரசு தனது தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறி வருகிறது. இத்திட்டத்திற்காக UDAN திட்டத்தின் கீழ் மத்திய நிதி கோரப்படவில்லை என்று தெரிவித்தன. மாறாக, ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் 2,300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஒரு முழுமையான சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கும் பெரிய திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளுக்கு சேவை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் டெவலப்பர்களின் பங்களிப்பும் இதில் இருக்கலாம். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO), திட்டத்திற்கான விரிவான அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கான நிதியை மாநில அரசு வழங்கத் தொடங்கிவிட்டதுடன், மத்திய அரசிடம் இருந்து தள அனுமதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

BIAL அதிகாரிகள் நிர்வகிப்பார்கள்

இருப்பினும், தமிழக அரசு அதிகாரிகள் இதை ஒரு மாற்ற முடியாத சட்டமாகக் கருதவில்லை. இது ஒரு வர்த்தக நிபந்தனை, சட்டப்பூர்வ விதி அல்ல, BIAL நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்கவே இந்த நிபந்தனை என்று ஒரு TIDCO அதிகாரி டெக்கான் ஹெரால்டு பத்திரிகைக்குத் தெரிவித்தார். BIAL மற்றும் மத்திய அரசுடன் ஒரு தீர்வை எட்ட மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது. BIAL அதிகாரிகள் கூட ஓசூர் விமான நிலையத்தை நிர்வகிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

“150 கி.மீ. கட்டுப்பாடு ஒரு சட்டம் அல்ல, மாறாக ஒரு தனியார் நிறுவனத்தின் வணிக நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு வணிக ஒப்பந்தத்தில் உள்ள ஒரு நிபந்தனை மட்டுமே” என்று அந்த அதிகாரி கூறியிருந்தார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கின்ஜரபு ராமமோகன் நாயுடு, BIAL, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகிய மூன்று தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஓசூர் விமான நிலையம் தள்ளிப்போகலாம்

ஒருவேளை ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், இத்தகைய பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தைக் கட்டி முடிக்க நீண்ட காலம் ஆகும் என்பதை ஒப்புக்கொண்டு, BIAL ஒப்பந்த காலம் 2033 இல் முடியும் வரை காத்திருப்பதை தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஓசூர் விமான நிலையம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், UDAN திட்டம் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் முன்னேறி வருகிறது. மண்டல இணைப்புத் திட்டத்தின் கீழ் ₹84.9 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வேலூர் மற்றும் நெய்வேலியில் உள்ள புதிய விமான நிலையங்களுக்கான உரிமப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+