Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி தோழனை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்.. இந்தியா கொடுத்த மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

அஹமதாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவில் உள்ள பள்ளித்தோழனை காதலித்து திருமணம் செய்த நிலையில், 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியா வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோமல் என்ற பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமைச் சான்றிதழை நேற்று முன்தினம் அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேரில் சென்று வழங்கினார்.

A Pakistani girl married indian school mate, gets Indian citizenship 14 yrs later

பாகிஸ்தானைச் சேர்ந்த கோமலின் குடும்பம் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய சிரமங்களைச் சந்தித்த காரணத்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்துள்ளது. கோமலின் அப்பா கராச்சியில் தொழிலதிபராக இருந்துள்ளார். அவருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, கொள்ளை சம்பவங்கள் காரணமாகவும் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தாராம்.

அதன்படியே பாகிஸ்தானில் உள்ள தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ்க்கு பிழைப்பு தேடி மூன்று பெண் குழந்தைகளுடன் கடந்த 2009ம் ஆண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இந்தியா வந்த கோமல், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பரான குஜராத்தைச் சேர்ந்த ஹிதேஷை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். தற்போது அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்திய குடியுரிமை தனது மனைவிக்கு கிடைத்தது குறித்து கோமலின் கணவர் ஹிதேஷ் கூறுகையில், கோமலின் தந்தை பாகிஸ்தானின் கராச்சியில் தொழிலதிபராக இருந்த நிலையில், அங்கிருந்து மூன்று பெண் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு மிகுந்த கவலையுடன் இந்தியா வந்தார். சொத்துக்கள் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் குடியேறினார்

இதையடுத்து இந்திய பள்ளியில் தனது மூன்று மகள்களையும் சேர்த்து படிக்க வைத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு நான் படித்த சர்தார்நகரில் உள்ள பள்ளியில் மூன்று பேரும் படிப்பதற்காக வந்தார்கள். அப்போது நான் அங்கு 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அந்த மூன்றுபேரையும் பாகிஸ்தானி சகோதரிகள் என்று அழைத்தார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை, ஏனெனில் இப்படி பேசுவது அநாகரிகம் என்று கூறினேன்.

என் சகோதரி கோமலுடன் அதே வகுப்பில் படித்தார். பாகிஸ்தானில் அவர்கள் சந்தித்த சிரமங்களை என்னிடம் கூறினார். அவர்கள் பாகிஸ்தானில் சந்தித்த நிலையைச் சொன்னதும், அவர்களிடம் அன்பு காட்டி பேசினேன் ஒரு கட்டத்தில் கோமலும் மற்றும் அவரின் சகோதரிகள் இருவர் என மூன்று பேரும் எனக்கு நண்பர்கள் ஆனார்கள்,

காலப்போக்கில் கோமலுடனான என் நட்பு காதலாக மாறியது. கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தற்போது எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

14 வருடங்கள் கழித்து என் மனைவி கோமலுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. இதை, கடந்த 12ஆம் தேதி அமைச்சர் ஹர்ஷ் சங்வி அவரது கையால் என் மனைவியிடம் வழங்கினார்" என ஹிதேஷ் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+