Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிஷா டூ சமந்தா வரை பாலோ செய்றாங்க.. விவாதமான நடிகர் அல்லு அர்ஜுனின் ‛பிரைவேட்’ இன்ஸ்டாகிராம் பதிவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் இன்ஸ்கிராமில் தனிப்பட்ட கணக்கை வைத்துள்ளதாகவும், அதனை நடிககைகள் சமந்தா, திரிஷா, நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் பின்தொடர்ந்து வருவதாகவும் ரெடிட் வலைதள பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளார். அதோடு அந்த பக்கத்தில் மீம்ஸ்களை தான் அதிகமாக பகிர்வதாகவும், குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைதுக்கு காரணமான புஷ்பா 2 கூட்ட நெரிசல் தொடர்பான மீமை அவர் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுவது விவாதமாகி உள்ளது.

தற்போது நாம் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகிறோம். அதேபோல் தான் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்காமலும் உள்ளனர்.

allu arjun instagram cinima

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் alluarjunonline என்ற பெயரில் கணக்கு பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் மொத்தம் 667 பதிவுகள் செய்துள்ளார். மொத்தம் 28.3 மில்லியன் பேர் அந்த கணக்கை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஒன்றை வைத்துள்ளதாக ரெடிட் பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளார். அதில், ‛‛நடிகர் அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பிரைவேட் அக்கவுண்ட் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். அதன் பெயர் @bunny_boy_Private என்பதாகும். அதன் பயோவில் private account to post random shit without thinking என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரோபைலில் அல்லு அர்ஜுனின் போட்டோ உள்ளது. இந்த அக்கவுண்ட்டை நடிகைகள் சமந்தா, திரிஷா மற்றும் அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பரான நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் பாலோ செய்கின்றனர்.

இதனால் நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு இதுதான். இந்த அக்கவுண்ட்டில் புஷ்பா 2 கூட்ட நெரிசல் தொடர்பான மீம்ஸ் உள்பட பல மீம்ஸ்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்று வந்த பிறகு தன்னை பார்க்க வந்த ராணாவுடன் சேர்ந்து இருப்பது போன்ற மீமையும் பகிர்ந்துள்ளார். இதனை ஏற்கனவே ராணா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அதுவும் இங்கு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த பக்கம் பற்றி நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

இருப்பினும் ரெடிட் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த பதிவை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் உண்மை என்று நம்புகின்றனர். இன்று மாலை 4 மணி நிலவரப்படி அந்த பக்கத்துக்கு 320 பாலோவர்ஸ், 394 பேர் பாலோ செய்பவர்கள் இருந்தனர். மொத்தம் 1380 பதிவுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது தொடர்பான மீம் பகிர்ந்து இருப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

அதில் ஒருவர், ‛‛கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அல்லு அர்ஜுனின் தவறு இல்லை. இருப்பினும் அதுதொடர்பான மீமை பகிர்வது தவறு'' என்று கூறியுள்ளார். அதேவேளையில் இன்னொருவர், ‛‛அந்த மீம் என்பது கூட்ட நெரிசலுக்கு தொடர்புடையது இல்லை. அந்த மீம் என்பது ராணா மற்றும் அல்லு அர்ஜுன் இடையேயான நட்பை உணர்த்து வகையிலானது'' என்று கூறியுள்ளார். இப்படி ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பதிவு விவாதமாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+