பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம்.. ஹைதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசி வெற்றி!
ஹைதராபாத்: தெலங்கானாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி அசாதுதீன் ஓவைசி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மாநில அரசை பொறுத்த வரை காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக உள்ளது. எனவே லோக்சபா தேர்தலிலும் இதன் ஓங்குமா? அல்லது பாஜக போட்டி கொடுக்குமா? முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி முன்னிலை பெறுமா? என்கிற கேள்வி எழுந்திருந்தது.
இன்று காலை முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில், காங்கிரசும், பாஜகவும் சரிபாதி தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன. மீதமிருந்த ஒரு தொகுதியில் ஓவைசி முன்னிலையில் இருந்தார். அப்போதிலிருந்து பிஆர்எஸ் கட்சியை பார்க்க முடியவில்லை.
தற்போது நிலவரப்படி காங்கிரசும், பாஜகவும் தலா 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதியான ஹைதராபாத்தில் அசாதுதீன் ஓவைசி வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மாதவி லதா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, பெத்தபள்ளே, நல்கொண்டா, போங்கிர், வரங்கல், கம்மம், ஜாகீராபாத், நாகர்கர்னூல், மெகபூபாபாத் ஆகிய தொகுதிகளையும், பாஜக அதிலாபாத், கரீம்நகர், மேடக், மல்காஜ்கிரி, செகந்தராபாத், செவெல்லா, மெகபூபாநகர் என 8 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications