உங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சொந்த ஊர் மக்களுக்கு அதிரடியாகப் பல சலுகைகளை அறிவித்துள்ளார், இந்த அறிவிப்புகள் தெலுங்கானா மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வருடம் தனது ஆட்சியையே கலைத்துவிட்டு மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தார். தனது சொந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.சி.ஆர் நேற்று தனது சொந்த ஊரான சிந்தமடகாவுக்கு சென்றார்.

அங்கு தனது பழைய நண்பர்கள், உறவினர்கள், மற்றும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திர சேகரராவ் அந்தக் கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அரசு தரும் இந்த பணத்தை விவசாய பணிகளுக்கோ, தொழில் தொடங்கவோ மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதற்காக அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதற்காக மொத்த ரூ. 400 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சித்தபேட் மாவட்டத்தின் சிந்தமடகா கிராமத்தில் உள்ள 2,000 குடும்பங்களுக்கும் உடனே நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பிறந்த கிராம மக்களுக்கு உதவ வேண்டியது தன் கடமை என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொதுநிலையினர் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது சொந்த ஊருக்கு பெரிய அளவில் உதவி செய்வதென்றால் தனது பணத்திலிருந்து செய்ய வேண்டும் என பலதரப்பினரும் கூறிவருகின்றனர். அதோடு சந்திரசேகர ராவ் முதல்வர் போல அல்லாமல் கிராம தலைவர் போல செயல்படுகிறார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
அவரது இந்த பேச்சு பொதுமக்களிடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்தமடகாவைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், கே.சி.ஆர் சுயநலமாகத் தனது சொந்த ஊர் மக்களை மட்டும் முன்னேற்ற இப்படிச் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2000 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் என்ற அறிவிப்போடு ஹாஸ்டல்கள், சாலைகள் ஆகியவை அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார். அதோடு இந்த பணிகளை கவனிக்கும் பொறுப்பை தனது மருமகனும் எம்.எல்.ஏ-வுமான ஹரிஷ் ராவிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்திரசேகர ராவ் தனது சொந்த ஊர் மக்களுக்கு அள்ளி, அள்ளி கொடுக்க வேண்டும் என்றால் தனது சொந்தப் பணத்தில் செய்ய வேண்டியதுதானே என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
10ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து.. அடுத்தாண்டு முதல் எக்ஸாம் டென்சன் இல்லை.. மாநில அரசு அறிவிப்பு -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications