இதுதான் உங்க கலாச்சாரமா? பிரதமரின் பெருந்தன்மையை மறந்துவிட்டீர்களா? சந்திரசேகர ராவை விமர்சித்த பாஜக
ஐதராபாத்: ராமானுஜரின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்காத நிலையில் இது நெறிமுறை மீறல் என விமர்சித்துள்ள பாஜக தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார், இதுதான் உங்கள் கலாச்சாரமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். சமத்துவத்துக்காக சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இச்சிலையா முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடைகளின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 216 அடி உயரத்தில் 1550 டன் ஐம்பொன் மற்றும் 120 கிலோ தங்கம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதோடு, தாமரை மலர்மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் வகையில் இந்த சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை
முன்னதாக பிற்பகல் ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்பளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியை முதல்வர் சந்திரசேகரராவ் பங்கேற்காத நிலையில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறை கூட சந்திரசேகர ராவ் வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெறிமுறை மீறல்
இது நெறிமுறை மீறல் என விமர்சித்துள்ள பாஜக தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார், இதுதான் உங்கள் கலாச்சாரமா என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் இன்றுவரை பிரதமர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகரராவ் பங்கேற்க வில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க முதல்வர் வன்மையாக கண்டிப்பதாகவும், 80 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும் நீங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதானா எனவும் இது தான் உங்கள் கலாச்சாரம் எனவும் கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் பெருந்தன்மை
பிரதமரை அவமதிப்பது நாட்டு மக்களை அவமதிப்பது போன்றது என்று கூறிய அவர், பிரதமரின் பெருந்தன்மையை மறந்துவிட்டீர்களா? மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமரை வரவேற்கும் அடிப்படை மரியாதை இல்லாமல், உங்கள் பண்ணை வீட்டில் உங்களை எப்படி அடைத்துக்கொள்வீர்கள் என்றும் பண்டி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி ஹைதராபாத்தில் இருக்கும் போது கேசிஆர் துரோகம் செய்து, பின்னர் நொண்டி சாக்குகளை கூறி ஏமாற்றுவது வெட்கக்கேடானது என்றும் பாண்டி சஞ்சய் குமார் பேசினார்.

இழிவான துஷ்பிரயோகம்
பிரதமர் மீதான ராவின் இழிவான துஷ்பிரயோகங்களை ஒட்டுமொத்த நாடும் வெறுத்து வரும் நிலையில், பிரதமருக்கு தனது முகத்தைக் காட்ட முதல்வர் விரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். கடந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்களை ஏமாற்றிய 'கோல்மால் பட்ஜெட்' என்றும், பிரதமர் மோடியை "குறுகிய பார்வையற்ற பிரதமர்" என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications