Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோஜா மன்னிப்பு கோர வேண்டும்.. ரஜினியை எப்படி விமர்சிக்கலாம்.. சப்போர்ட்டுக்கு வந்த சந்திரபாபு நாயுடு

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: நடிகர் ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்றும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த என்டி ராமராவின் 100-வது பிறந்த நாள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் நடைபெற்றது. இதில், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chandrababu Naidu strongly condemns Roja for criticizing Rajinikanth

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோதே அந்த துறை பற்றி புரிந்து கொண்டு செயல்பட்டதால் ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்து நியூயார்க் நகரம் போல் வளர்ந்துள்ளது.

ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அவர் வித்திட்டார். அவருடைய முயற்சியின் காரணமாக இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த ஐடி நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஐதராபாத்தில் துவங்கின" என்று பாராட்டி பேசியிருந்தார்.

சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரும், நடிகையுமான ரோஜா, ரஜினிகாந்த் கருத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, "ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.

Chandrababu Naidu strongly condemns Roja for criticizing Rajinikanth

ரஜினிகாந்த் உண்மை தெரிந்து பேசினாரா, இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசினாரா என்று தெரியவில்லை. ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த், ஐடியாவே இன்றி பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் சென்றால் அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும்.

ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்டி. ராமராவ் ஆசிகளைப் பொழிகிறார் என்று பேசினார். என்.டி.ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும்?" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தை விமர்சித்து பேசியதற்கு தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திர பாபு நாயுடு கூறுகையில், ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும்.

வாய்க்கொழுப்பு எடுத்து பேசும் தனது கட்சியினரை ஜெகன் மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள்.. மன்னிக்கவும் மாட்டார்கள். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+