தீபாவளிக்கு கோலம் போட்ட இந்து குடும்பம்.. "இதெல்லாம் ரொம்ப தப்பு!" ஆவேசமான எதிர்வீட்டு கிறிஸ்தவர்கள்
ஹைதராபாத்: தீபாவளிக்குக் கோலம் தொடர்பாக ஹைதராபாத்தில் இரு வேறு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த அக். 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை.
இருப்பினும், இந்தாண்டு கட்டுப்பாடுகள் பெருமளவு நீக்கப்பட்டுவிட்டன. இதனால் மக்கள் பழைய உற்சாகத்துடன் இந்தாண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

தெலங்கானா
இதனிடையே தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தீபாவளி கோலம் தொடர்பாக திடீரென சர்ச்சை ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 24ஆம் தீபாவளி தினத்தன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தீபாவளிக்கு ரங்கோலி கோலம் போட்டதற்கு எதிர் வீட்டில் இருந்த கிறிஸ்தவ குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் கூட இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

எதிர்ப்பு
அந்த வீடியோவில் வாசலில் ரங்கோலி கோலம் போட்டதற்கு அந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்படி கோலம் போட்டால் எப்படி வெளியே சென்று வர முடியும் என்றும் ஆவேசமாகக் கேட்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. இந்தச் சம்பவம் ஹைதராபாத் சிகாபல்லி பகுதியில் உள்ள கோல்கொண்டா கிராஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்துள்ளது.

போராட்டம்
இந்த வீடியோ முதலில் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அங்குள்ள இந்து அமைப்புகள் இதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். அந்த குடியிருப்பிற்கு முன்னால் ஒன்றுகூடிய வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கோலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பொது இடத்தில் கோலம் போடுவதை எப்படி எதிர்க்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்து அமைப்புகள்
கொஞ்ச நேரத்திலேயே இந்து அமைப்பைச் சேர்ந்த பலர் அங்கு ஒன்று கூடினர். மேலும், அவர்கள் ஜெய் ஶ்ரீ ராம் என்றும் கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். இதனால் அங்கு திடீரென பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதையடுத்து நிலைமை கையைவிட்டுச் செல்லாமல் இருக்க அந்த குடியிருப்பைச் சுற்றி அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு நிலைமை கையை மீறிச் செல்லவில்லை.

என்ன பிரச்சினை
இது தொடர்பாக போலீஸ் ஆய்வாளர் சஞ்சய் குமார் கூறுகையில், "தீபாவளி அன்று ஒரு இந்து குடும்பம் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுவான பகுதியில் ரங்கோலி கோலம் போட்டனர். எதிர் பிளாட்டில் வசிக்கும் கிறிஸ்தவ குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் பொதுவான பகுதியில் எப்படி இதுபோல கோலமிடலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே இருந்த பிரச்சினை தான்
அந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே பல பிரச்சினைகள் இருந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இப்போது கோலம் தொடர்பாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். அந்த குடும்பத்தினர் மீது ஐபிசி 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications