நிற்காத மழை! மேக வெடிப்புக்கு பின் வெளிநாட்டு சதி.. குண்டை தூக்கி போடும் தெலுங்கானா முதல்வர்!
ஹைதராபாத்: வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியின் காரணமாகவே மேகவெடிப்பு ஏற்படுகிறது எனதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் இருந்து பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதிலும் குறிப்பாக ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கான, கர்நாடாக போன்ற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இதில் தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தில் மிதக்கும் தெலுங்கானா
அந்த வகையில் ஒருவாரமாக தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள பத்ரசலாம் அணையின் நீர் மட்டம் 53 அடியை கடந்த நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது.

ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்
கனமழையால் பல இங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய, அரிதான நிகழ்வு ஆங்காங்கே தற்போது நடந்து வருகிறது. இந்த மேக வெடிப்பு சதியாக கூட இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர்.

வெளிநாடுளின் சதி
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் கூட காஷ்மீர் அருகே இது போன்ற மேக வெடிப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், தற்போது கோதாவரி பகுதியிலும் மேக வெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன" என்றார்.

மேக வெடிப்பு என்றால் என்ன?
பொதுவாக மேகங்கள் உருவாவததற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தினை விட மிக குறைவான நேரத்தில் மழைமேகங்கள் உருவாகி, மெதுவாக பொழியாமல் ஒரே இடத்தில் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை கொட்டித் தீர்த்தால் அது தான் மேகவெடிப்பு. ஒரே இடத்தில் திடீரென 10 செண்டி மீட்டருக்கு மேலும் மழை பெய்யும் போது அந்த இடத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக மலைப்பகுதி என்றால் அங்கு மலைச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அணைப்பகுதி என்றால் அணையின் நீர்மட்டம் சற்று நேரத்தில் 10 செ.மீ அதிகரிக்கும். இதனால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications