அரசு குருகுல பாடசாலையில்.. பொத் பொத்தென கீழே விழுந்த மாணவிகள்.. யாரிந்த முதல்வர்? ஒரே பரபரப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் வரை, சம்பந்தப்பட்ட பள்ளியை கடுமையாக கண்டித்தும், நடவடிக்கையை கோரியும் வருகிறார்கள்.. அந்த பள்ளியின் மாணவிகளுக்கு என்ன நடந்தது?
மாணவர்கள் சரியாக படிக்காவிட்டால், அல்லது ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், தோப்புக்கரணம் செய்ய வைப்பது பள்ளிகளில் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படித்தான் ஆந்திராவிலுள்ள பள்ளியிலும் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

பள்ளி ஆசிரியர்: ஆந்திர பிரதேசம் பள்ளி ஒன்றில், மாணவிகள் சிலர் ஒழுங்காக படிப்பதில்லை என்றும், தங்களது உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்றும், ஆசிரியர்கள் சிலர், தலைமை ஆசிரியரிடம் புகார்களை கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, பள்ளி முதல்வர் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கிறார்.. அதாவது, 3 நாட்களுக்கு, தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மாணவிகள்: மாணவிகளும் தோப்புக்கரணம் போட முயன்றுள்ளார்.. ஆனால், மாணவிகளால் 200 தோப்புக்கரணம் போட முடியவில்லை.. இதனால், கால் வலியால் திணறினார்கள்.. அப்போதுகூட தலைமை ஆசிரியர் மனமிரங்காமல், கட்டாயம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று சொன்னார்.. இதனால், மீண்டும் மாணவிகள் தோப்புக்கரணம் போட்டபோது, ஒவ்வொருவரின் உடல்நிலையும் மிகவும் மோசம் அடைந்தது.. சிலர் கால்கள் வீங்கியபடி கதற துவங்கினார்கள்.
அப்போதும் தண்டனையை அந்த தலைமை ஆசிரியர் நிறுத்தவில்லையாம்.. இறுதியில், கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே பொத் பொத்தென்று மயங்கி, சரிந்து கீழே விழுந்திருக்கிறார்கள்.. மாணவிகள் மொத்தமாக இப்படி விழுந்துவிட்டதால், பதறிப்போன மற்ற ஆசிரியர்கள் உடனடியாக, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தந்தனர்.

அதிர்ச்சி: அத்துடன், மாணவிகள் அனைவரையும் அருகிலுள்ள மருத்துவமனையிலும் கொண்டு சென்று அனுமதித்தனர்.. பெற்றோர்கள் பதறிப்போய் மருத்துவமனைக்கு வரவும், இதற்கு பிறகுதான், இந்த விவகாரமே பூதாகரமாக வெடித்து கிளம்பிவிட்டது.. இறுதியில், ரம்பச்சோதவரம் எம்எல்ஏ மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு விஷயம் பறந்துள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ, "மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை மனித தன்மையற்றது.. ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனையை தரவேண்டிய அவசியமே இல்லை... இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications