ஆபத்து ஆபத்து.. பேய் மழை வரப்போகுது.. அதைவிடுங்க.. இன்னொரு "பேராபத்து" வருதாம்.. ஸ்வர்ணலதா சொல்றாங்க
ஹைதராபாத்: வானிலை குறித்து முக்கிய கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதைக்கேட்டு தெலுங்கானா மக்கள் கதிகலங்கி உள்ளனர்.. என்ன காரணம்?
இந்த முறை தென்மேற்கு பருவமழை தொடங்கியதே காலதாமதமாகத்தான்.. இந்த மழையை நம்பியே இந்த தேசத்தின் விவசாயிகள் இருக்கிறார்கள்.. இந்த முறை தாமதமாக பருவமழை பொழிந்தாலும், பரவலாக பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

கடந்த ஆண்டு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தெலுங்கானாவில் நல்ல மழை பெய்தது.. இப்போதும் அங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில், பேய் மழை பெய்யும் என்று அங்குள்ள நிபுணர் ஒருவர் கணித்து சொல்லி உள்ளார்.
கருத்து கணிப்புகள்: அந்த கருத்து கணிப்புக்களை வழங்குபவர் பெயர் மாதங்கி ஸ்வர்ணலதா.. தெலுங்கானாவில் இந்த பெண் மிகவும் பிரபலம்.. இவர் கணித்து சொல்லும் வானிலை தகவல்கள் எல்லாமே கிட்டத்தட்ட அப்படியே நடந்து வருகிறது. மழை பற்றியும், அதன் தாக்கம், பாதிப்புகள் குறித்தும் கணிப்புகளாக ஸ்வர்ணலதா வருடாவருடம் சொல்லுவார்..
எப்போதுமே, செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜயினி மகான்காளி கோவில் வளாகத்தில், ஒரு மண் பானையின் மேல் நின்றுக்கொண்டுதான், இவர் கணிப்புகளை சொல்வாராம்.. இவர் சொல்லும் கணிப்புகளை கேட்க, பக்தர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்கள் திரண்டு வருவார்களாம்.. அப்படித்தான் கடந்த வருடமும் தன் கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
நகைகள் களவு போகும்: அப்போது, பூஜைகளை சரியாக செய்வதில்லை, இதன்காரணமாகவே மழை பெய்யவில்லை, அத்துடன் கோவில்களிலிருந்தும் தங்க நகைகள் திருடு போகும் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த வருடமும் ஸ்வர்ணலதா கணிப்பு கூறியுள்ளார்.. அந்த கணிப்பில், "தெலுங்கானாவில் விரைவில் பேய் மழை வரப்போகுது.. கடந்த வருடம் போல இல்லாமல், இந்த முறை பூஜைகளை சரியாக செய்ய வேண்டும்.. குறிப்பாக 5 வார காலத்துக்கு இந்த சிறப்பு பூஜைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.. எப்படி அந்த பூஜைகளை செய்ய வேண்டும் என்பதை பற்றி விரைவில் சொல்லுவேன்.. இந்த பூஜைகளை சரியாக செய்தால்தான், வரப்போகும் அழிவிலிருந்து நாம் தப்பிக்க முடியும்..
பெரும் தீ விபத்து: கடந்த முறை சரியாக பூஜைகள் செய்யாததால் பாதிப்புகள் வந்தது. ஆனால், ஏற்பாடுகளை இப்போது சரியாக செய்திருக்கிறார்கள். அதனால் பெரிதாக பாதிப்பு வராது.. எனினும் பேய் மழை இருக்கும். ஆனால், இப்போது மழை பெய்யாது, இன்னும் சில நாட்கள் கழித்து பெய்யும். அதுமட்டுமல்ல, மிகப்பெரிய தீ விபத்து நடக்க போகுது.. இந்த வருடம் மக்கள் சந்தோஷமாக இருக்க போகிறார்கள்" என்று கணித்துள்ளார்.
இந்த கணிப்புதான் தெலுங்கானாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. பேய்மழையும் + பெருந்தீ விபத்தும் நடக்கபோவதாக ஆரூடம் கூறியுள்ளதால், இதை கேட்டு அம்மாநில மக்கள் கதிகலங்கி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications