ஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன.
ஹைதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையம் நம்மூர் எக்மோர் ரயில் நிலையத்தை போல் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு, தமிழகம், கர்நாடகா உள்ளிட்டமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து டெல்லி நிஜாமூதின் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 10 மணி அளவில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் திடீரென மோதியது.

இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கச்சிகுடா ரயில் நிலையத்தின் உளளே ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவது வழக்கம். அதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications