இன்ஸ்டாவில் கள்ளக்காதல்! கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிய பெண்! ஹைதராபாத்தில் அதிர்ச்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தனது கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு இன்ஸ்டா காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (31). இவரது கணவர் ஜெயராஜ். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுகன்யா சமூகவலைதளத்தில் அதிகம் மூழ்கி இருந்தது தெரியவந்தது.

இதன் விளைவாக கோபி (22) என்ற இளைஞருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி அன்று சுகன்யா, கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.
குழந்தைகளையும் தன்னையும் தவிக்கவிட்டுவிட்டு சென்ற சுகன்யாவை கண்டுபிடித்துத் தருமாறு ஜெயராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே மனைவியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பார்த்துவிட்டார்.
உடனே பின் தொடர்ந்த அவர் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்ற போது கோபியும் சுகன்யாவும் பைக்கை போட்டுவிட்டு ஓடும் பேருந்தில் ஏறிச் சென்றனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் கார் பார்க்கிங்கை விட்டு சுகன்யாவும் கோபியும் வெளியே வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications