நிலவில் நிலாச்சோறு.. சாத்தியமே!.. நிலவில் 5 ஏக்கர் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்!
Recommended Video
ஹைதராபாத்: சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பினாலும் அனுப்பியது ஏதோ டவுன் பஸ்ஸை அங்கு அனுப்பிவிட்டதாக கருதி ஹைதராபாத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கூறி வருகிறார்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 22-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து விலகி நிலவுக்கு புறப்படும்.
இது ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடையும். இந்த நிலையில் நிலவில் 5 ஏக்கர் இடம் வாங்கிய ராஜீவ் பக்தி, நிலவில் கால் பதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிலம் வாங்கியதாக கூறி வருகிறார்.

பேசு பொருளாகியுள்ள ராஜீவ்
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜோதிடர் மற்றும் பங்குச் சந்தை நிபுணராக உள்ளவர் ராஜீவ்பக்தி. இவர் 2003-ஆம் ஆண்டில் நிலவில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறியிருந்தார். தற்போது சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் பேசு பொருளாகியுள்ளார்.

வாழ்த்துகள்
2003-ஆம் ஆண்டு நிலவில் 5 ஏக்கர் நிலத்தை 140 டாலருக்கு நியூயார்க்கை சேர்ந்த லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு எனது வாழ்த்துகள்.

ஆர்வம்
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2030-ஆம்ஆண்டுக்குள் வெற்றிக்கரமாக முடிக்கப்படும் என நினைக்கிறேன். மேலும் நான் ஏன் நிலவு குறித்த விஷயத்தில் இத்தனை ஆர்வமாக இருக்கிறேன் என தெரியவில்லை.

முட்டாள்
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2003-ஆம் ஆண்டு நிலவில் இடம் விற்பனைக்கு இடம் என்ற செய்தியை பார்த்துவிட்டு அதை நன்கு ஆராய்ந்து நிலவில் இடம் வாங்கினேன். நான் முதலில் வாங்கியபோது என்னை எல்லோரும் முட்டாள் என கூறினர்.

நனவு
20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா செல்வது என்பது கனவாகவே இருந்தது. ஆனால் இப்போதே ஒரு குடும்பத்தில் ஒருவராவது சென்றுவிடுகின்றனர். எனவே அது போல் இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிலவில் மக்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

உறவினரும் கூட
நிலவில் ராஜீவ் பக்தி வாங்கிய இடத்துக்கு மேரே இம்பிரியம் என பெயரிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து உறவினர் லலித் மோஹதாவும் வாங்கியுள்ளார். இது போல் லட்சக்கணக்கானோர் நிலவில் இடம் வாங்கியுள்ளதாகவும் ராஜீவ் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications