பாயிண்ட்டை பிடித்த ராகுல் காந்தி.. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. தெலுங்கானாவில் வாக்குறுதி
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைய மக்கள் வாக்களித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சி எம்பி ராகுல் காந்தி உறுதியளித்து இருக்கிறார்.
சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் தெலுங்கானாவில் 2 வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியுடன் பி.ஆர்.எஸ். ஆட்சிகாலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 19 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி புபால்பள்ளி முதல் பெட்டபள்ளி வரை விஜயாபெரி என்ற யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த யாத்திரையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக 3 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்து உள்ள அக்கட்சி எம்பி ராகுல் காந்தி வருகை தந்து இருக்கிறார்.
இந்த யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய அவர், "நாட்டின் முக்கிய பிரச்சனையாக இருப்பது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான். அதுதான் நாட்டின் எக்ஸ் ரே போன்றது. தலித்துகள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது வெளிச்சம் பாய்ச்சி அவர்களின் நிலை என்ன என்று காட்டும். நாட்டின் நிதி எப்படி பங்கிடப்படுகிறது என்பதை அறிய முடியும். கடைசியாக எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடமும் கேசிஆரிடமும் மக்கள் கேட்க வேண்டும்.
மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தெலுங்கானாவில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தெலுங்கானாவின் கனவுகள் நிறைவேற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை நான் உங்களுக்கு சத்தியமிட்டு சொல்கிறேன்." என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications