கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் தொகுதிகளை அள்ளிக் குவித்த டிஆர்எஸ்! ஏறுமுகத்தில் கேசிஆர்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கடந்த ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இது நீண்டகாலமாக கோரி வந்த நிலையில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மாநிலத்தை தனியாக பிரித்தது.

வெற்றி

வெற்றி

இதையடுத்து அந்த மாநிலத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அந்த மாநிலத்துக்காக போராடிய கே சந்திரசேகர ராவ் வெற்றி பெற்றார். அப்போது அவரது கட்சி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங் 3, பகுஜன் சமாஜ் 2, மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

வாக்குகள்

வாக்குகள்

இந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரி ஆட்சியை கலைத்தார். இதன் பின்னர் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

 87 இடங்களில்

87 இடங்களில்

அதில் டிஆர்எஸ் 87 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியோ 21 இடங்களிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

முடிவுகள்

முடிவுகள்

எனவே இது கடந்த தேர்தலை காட்டிலும் அதிகமாக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றி பெறும் என தெரிகிறது. மொத்தம் 119 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+