போலீஸாரின் கன்னத்தில் அறைந்த ஆந்திர முதல்வர் ஜெகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அதிரடி கைது
ஹைதராபாத்: தெலுங்கானா போலீஸார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அறைந்ததை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார், தெலுங்கானாவிலும் அடுத்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய ஒய் எஸ் ஷர்மிளா ஒய். எஸ்.ஆர். தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து அந்த மாநில அரசை கண்டித்து அவ்வப்போது போராட்டம், நடைப்பயணம் என ஷர்மிளா இருந்து வருகிறார். ஏற்கெனவே தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் கடந்த மாதம் 10 மணி நேரமாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையும் சுட்டிக்காட்டி ஷர்மிளா மக்களை சந்தித்து வருகிறார். திடீர் போராட்டங்களை நடத்தும் அவர் அவ்வப்போது கைதாகியும் வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் கடிந்தது.
இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக போராட்டம் நடத்துவதற்காக ஹைதராபாத்திற்கு ஷர்மிளா சென்றார். இதையறிந்த போலீஸார் அவரை போக விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷர்மிளா அந்த போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஷர்மிளாவின் கையை பிடித்து அவரை தடுத்த பெண் போலீஸை கீழே தள்ளிவிட்டார். பின்னர் பெண் போலீஸாருடனும் கடும் மோதல் போக்கில் இருந்தார். மேலும் பெண் போலீஸ் ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தை அடுத்து ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட போதிலும் போலீஸாரை பணி செய்ய விடாமல் பிடித்து தள்ளிவிட்டார். இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் உள்ள ஷர்மிளாவை சந்திக்க அவரது தாய் விஜயம்மா சென்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினார். ஆனால் விஜயம்மா கோபமடைந்து பெண் போலீஸ் ஒருவரின் கையை முறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஷர்மிளாவும் அவருடைய தாய் விஜயம்மா ஆகியோர் போலீஸாரை மாற்றி மாற்றி தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் ஷர்மிளாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது ஜெய் ஷர்மிளா அக்கா என அவருடைய ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications