போலீஸாரின் கன்னத்தில் அறைந்த ஆந்திர முதல்வர் ஜெகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அதிரடி கைது
ஹைதராபாத்: தெலுங்கானா போலீஸார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அறைந்ததை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார், தெலுங்கானாவிலும் அடுத்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய ஒய் எஸ் ஷர்மிளா ஒய். எஸ்.ஆர். தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து அந்த மாநில அரசை கண்டித்து அவ்வப்போது போராட்டம், நடைப்பயணம் என ஷர்மிளா இருந்து வருகிறார். ஏற்கெனவே தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் கடந்த மாதம் 10 மணி நேரமாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையும் சுட்டிக்காட்டி ஷர்மிளா மக்களை சந்தித்து வருகிறார். திடீர் போராட்டங்களை நடத்தும் அவர் அவ்வப்போது கைதாகியும் வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் கடிந்தது.
இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக போராட்டம் நடத்துவதற்காக ஹைதராபாத்திற்கு ஷர்மிளா சென்றார். இதையறிந்த போலீஸார் அவரை போக விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷர்மிளா அந்த போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஷர்மிளாவின் கையை பிடித்து அவரை தடுத்த பெண் போலீஸை கீழே தள்ளிவிட்டார். பின்னர் பெண் போலீஸாருடனும் கடும் மோதல் போக்கில் இருந்தார். மேலும் பெண் போலீஸ் ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தை அடுத்து ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட போதிலும் போலீஸாரை பணி செய்ய விடாமல் பிடித்து தள்ளிவிட்டார். இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் உள்ள ஷர்மிளாவை சந்திக்க அவரது தாய் விஜயம்மா சென்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினார். ஆனால் விஜயம்மா கோபமடைந்து பெண் போலீஸ் ஒருவரின் கையை முறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஷர்மிளாவும் அவருடைய தாய் விஜயம்மா ஆகியோர் போலீஸாரை மாற்றி மாற்றி தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் ஷர்மிளாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது ஜெய் ஷர்மிளா அக்கா என அவருடைய ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
-
ஸ்டாலினை உடன் ஒன்றாக மேடை ஏற மறுத்த ராகுல் காந்தி? தேர்தலுக்கு பின் நோ கூட்டணியா? காங்கிரஸ் திட்டம்? -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
மாம்பழம் சின்னம் விவகாரத்தில் ராமதாஸுக்கு பெரும் பின்னடைவு.. அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு! -
எனக்கு ஓட்டு போடாதீங்க.. தேர்தலுக்கு முன் போட்டியில் விலகிய காங்கிரஸ் வேட்பாளர்! பின்னணியில் பாஜக? -
என்.ஆர்.காங்கிரஸின் அசுர வளர்ச்சி + பாஜக ஆதரவு! புதுவையில் வாழ்வா சாவா போராட்டத்தில் காங்கிரஸ்! -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்!












Click it and Unblock the Notifications