Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மர்மஉறுப்பு துண்டிப்பு.. வீடெல்லாம் ஒரே ரத்தம்.. இறந்த மருத்துவ கல்லூரி மாணவர்.. பின்னணியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் மருத்துவக்கல்லூரி மாணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்துள்ள நிலையில் பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலம் எடகிரிகுட்டா பகுதியை சேர்ந்தவர் தீக்சித் ரெட்டி தீக்சித் ரெட்டி (வயது 20). இவர் தாய், சகோதரியுடன் வசித்து வந்தார். தீக்சித் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் படிப்பு படித்து வந்தார்.

Medical college student cuts private part testicle in Telangana, dies by sucide

இந்நிலையில் தான் தீக்சித் ரெட்டி தனது வீட்டில் நேற்று மாலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கடந்தார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு தீக்சித் ரெட்டியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே தீக்சித் ரெட்டி இறந்தது எப்படி? என்பது பற்றிய ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தீக்சித் ரெட்டியின் மர்மஉறுப்பு வெட்டப்பட்டுள்ளது. இதனால் உடலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் மயக்க நிலைக்கு சென்று இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அவர் தற்கொலை செய்தாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் அவரது இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது தீக்சித் ரெட்டி மர்மஉறுப்பை அறுத்து கொண்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தற்போது மருத்துவ படிப்பை படித்து வந்த தீக்சித் ரெட்டி சமீபகாலமாக மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்போது தனது அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு அவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று தப்பித்ததும், தற்போது 2 முறையாக தற்கொலைக்கு முயன்று இறந்ததும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி அவருடன் படிக்கும் மாணவர்கள் கூறுகையில், ‛‛தீக்சித் ரெட்டி தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே 4 ஆண்டுக்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், அதில் தப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அவன் மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக மருந்து எடுத்து கொள்ளாமல் இருந்த தீக்சித் ரெட்டி தற்கொலை செய்துள்ளார். இது மனவருத்தம் அளிக்கிறது'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+