8 தொகுதிகளை விட்டுடுங்க... மத்த 111-லும் அவங்களுக்கே குத்துங்க.. இதுதான் டிஆர்எஸ் வெற்றி பெற காரணம்!
ஹைதராபாத்: 8 தொகுதிகளை மட்டும் விட்டுட்டு மற்ற 111 தொகுதியிலும் டிஆர்எஸ் கட்சிக்கே வாக்களித்து விடுமாறு ஏஐஎம்ஐஎம் கட்சி மறைமுக தேர்தல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது. இதற்கு என்னதான் சந்திரசேகர ராவின் மக்கள் நல பணிகள் என்று கூறப்பட்டாலும் இன்னொரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது இத்தகைய வரலாற்று சாதனையை டிஆர்எஸ் படைப்பதற்கு முஸ்லிம் மக்களும் ஏஐஎம்ஐஎம் கட்சியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட்டது.

ஆதரியுங்கள்
119 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி தன் சமூகத்து மக்களிடம் 8 தொகுதிகளில் மட்டுமே நமது கட்சிக்கு வாக்களியுங்கள். மற்ற 111 தொகுதிகளில் டிஆர்எஸ் கட்சியை மட்டுமே ஆதரியுங்கள் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மதிப்பூதியம்
அதாவது மறைமுகமாக டிஆர்எஸ் கட்சிக்கு முஸ்லிம் கட்சி பிரசாரம் செய்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். மசூதிகளில் உள்ள மியூசின்கள் (பிரார்த்தனைகளுக்கு அழைப்பவர்கள்) மற்றும் இமாம்கள் ஆகியோருக்கு மதிப்பூதியத்தை அதிகரித்துள்ளார்.

இயலாத காரியம்
அவ்வப்போது முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்குவார். உருது மொழியில் பேசி அவர் முஸ்லிம்களை நேசிப்பதை உணர்த்தினார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக இருந்ததை கடந்த 4 ஆண்டுகளில் 12 சதவீதமாக உயர்த்தியவர் சந்திரசேகர ராவ். தேர்தல் பிரசாரத்தில் ராவ் இவ்வாறு வாக்குறுதி அளித்ததை காங்கிரஸின் குலாம் நபி ஆசாத்தும், ரேவந்த் ரெட்டியும் ஏற்கெனவே 4 சதவீத இடஒதுக்கீடே மிகவும் போதுமானதுதான். 12 சதவீதம் கொடுப்பது என்பது இயலாத ஒன்று, ராவ் மக்களை ஏமாற்ற பார்க்கிறார் என்றனர்.

நிலைப்பாடு
ஆனால் அதையும் ராவ் நடத்திக் காட்டிவிட்டார். தெலுங்கானாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் கூட சுவாமி பரிபூரநந்தாவை பிரசாரம் மாநில முழுவதும் அதுவும் ராவ் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பது போல் பிரசாரம் செய்ய பாஜக நியமித்தது. அதுமட்டுமல்லாமல் ஏஐஎம்ஐஎம் தலைவர் அதாதுதீன் ஒவைஸி உள்ளிட்டோர் மீது நெருப்பை உமிழ்ந்தனர். இதையெல்லாம் மனதில் கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும் பாஜகவுக்கும் எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் எடுக்க வைத்தது என கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications