உஸ்மானியா பல்கலை.யில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு- கேசிஆர் மீது காங். கடும் பாய்ச்சல்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்திக்க மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் அழுத்தத்தால்தான் உஸ்மானியா பல்கலைக் கழகம், ராகுல் காந்திக்கு அனுமதி தரவில்லை என சாடியுள்ளது காங்கிரஸ்.
தெலுங்கானா மாநில சட்டசபையில் 119 இடங்கள் உள்ளன. தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே தெலுங்கானா தேர்தல் களம் அனலடிக்க தொடங்கி உள்ளது.

மிதப்பில் டிஆர்எஸ்
தெலுங்கானாவை பொறுத்தவரையில் ஆளும் டிஆர்எஸ் கட்சி தங்களை வீழ்த்த யாரும் இல்லை என்கிற மிதப்பில் உள்ளது. 2018 தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மொத்தம் 88 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. தெலுங்குதேசம் கட்சியால் தெலுங்கானாவில் சோபிக்க முடியவில்லை.

டிஆர்எஸ்- பிகே
இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்பதில் காங்கிரஸூம் பாஜகவும் வரிந்து கட்டுகின்றன. ஆனால் ஆளும் டிஆர்எஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைப்பதில் படுமுனைப்பாக இருக்கிறது. இதன் முதல் கட்டமாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் அக்கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது. இத்தனைக்கும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையக் கூடும் என கூறப்பட்ட நேரத்தில் டி.ஆர்.எஸுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது சர்ச்சையானது. பின்னர் காங்கிரஸிலேயே இணையவே இல்லை என அறிவித்தா பிரசாந்த் கிஷோர்.

தெலுங்கானாவில் ராகுல்
இந்த சூழலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து தெலுங்கானாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மே 6,7 ஆகிய தேதிகளில் தெலுங்கானாவில் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, வாரங்கலில் 5 லட்சம் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். அதன்பின்னர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி கேட்கப்பட்டிருந்தது. உஸ்மானியா பல்கலை கழகமானது தெலுங்கானா தனி மாநில பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உக்கிரமான பங்களிப்பை செய்திருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் வெடித்திருந்தன. இதனால் ராகுல் காந்தி, மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி மறுத்து உஸ்மானியா பல்கலை. நிர்வாகம்.

காங். பாய்ச்சல்
ஆனால் ராகுல் காந்தியை கண்டு அச்சப்பட்டுதான் ஆளும் டிஆர்எஸ் கட்சியும் முதல்வர் கேசிஆரும் உஸ்மானியா பல்கலைக் கழகத்துக்கு நெருக்கடி தந்து அனுமதி மறுக்க செய்தனர் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அத்துடன் ராகுல் காந்திக்கு அனுமதி வழங்க கோரி மாணவர் காங்கிரசார் போராட்டத்தையும் நடத்தினர்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications