ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக புகார்.. 13 தமிழர்கள் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரக்கடத்தல் தொடர்கதையாகி வரும் நிலையில், அப்பாவி தமிழர்களுக்கு ஊதியத்துடன் பல்வேறு சலுகைகளை கொடுத்து, செம்மரம் வெட்டுவதற்கு சிலர் அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. செம்மரம் வெட்டிக்கடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், ஆந்திரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிற்குரியது.

இந்த நிலையில் திருப்பதி அருகே உள்ள ஐத்தேபள்ளி வனப்பகுதியில், செம்மரங்களை ஏற்ற வந்த வாகனத்துடன் 13 பேரை ஆந்திரா வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். கடந்த மாதம் 26-ம் தேதி, செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழக தொழிலாளர்கள் 12 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதே போல், கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications