உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா தோல்வியால் ஷாக்! "ஹார்ட் அட்டாக்கில்" 32 வயது என்ஜினியர் மரணம்
ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த திருப்பதியை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜோதிகுமார் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஆடியது. ஆரம்பத்தில் 3 விக்கெட்டை பறிகொடுத்தாலும் அதன்பின்னர் பொறுமையாக ஆடி அந்த அணி வெற்றி பெற்றது.
ரசிகர்கள் கண்ணீர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுததையும் காண முடிந்தது.
அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுத்திப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியும் இந்தியா இந்த முறை கோப்பையை வென்றுவிடும் என்றே நினைத்த பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுததையும் காணமுடிந்தது. இந்த நிலையில், திருப்பதியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில், 32 -வயதே ஆன என்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருமணம் நடத்த இருந்தோம்: ஜோதி குமார் என்ற அந்த நபரின் தந்தை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். திருப்பதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ஜோதி குமார், கிரிக்கெட்டின் தீவிர ரசிகராம். நேற்றைய போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று நினைத்திருந்த ஜோதிகுமாருக்கு ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.
இதனால் அதிர்ச்சியில் இருந்த ஜோதிகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், "மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்" என்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications