Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹை லெவல்" சேஞ்ச்.. 3 முக்கிய மேட்டரை கையில் எடுத்த திருப்பதி தேவஸ்தானம்.. திருமலை பக்தர்கள் ஹேப்பி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 முக்கிய விஷயங்களில் கவனத்தை செலுத்த துவங்கி உள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: முக்கியமான 3 விஷயங்களில் தேவஸ்தானம் கவனத்தை செலுத்தி உள்ளதுடன், தற்போது அதற்கான வேலைகளையும் துரிதமாக கையில் எடுத்துள்ளதாம்.. இந்த பணிகளை இன்னும் ஒருவருட காலத்திற்குள் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கிறார்கள். அந்தவகையில், பக்தர்கள் இங்கு வந்து தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கணக்கில் கொண்டு ஏராளமான வசதிகள் குறிப்பாக அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன..

காட்டேஜ்கள்

காட்டேஜ்கள்

தரிசனத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக ரூ.50, 100, 200 என்றும் இந்த அறைகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது... இந்த வாடகையை திடீரென உயர்த்திவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் அதிர வைத்தன.. 150 ரூபாயாக இருந்து வந்த கட்டணம் தற்போது 1000 ரூபாய்க்கு எகிறிவிட்டதாம்.. ஸ்பெஷல் ரூம்களிலும், ரூ.750 இருந்த வாடகை ரூ.2,200 ஆக உயர்ந்துவிட்டது.. எல்லாவற்றுக்கும் மேலாக, பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே ரூம்கள் கிடைக்கும். இதனால் தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருவதாக கூறப்பட்டது.

3 ப்ளான்கள்

3 ப்ளான்கள்

இதையடுத்து, சில மாற்றங்களை செய்வதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியிருந்தன.. இப்படி அதிருப்தி தகவல்கள் ஒருபக்கம் இருந்தாலும், பக்தர்களுக்கான மகிழ்ச்சி செய்திகளையும் தேவஸ்தானம் அடிக்கடி வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், இல்லாத திருமலை என்ற முன்னெடுப்பை கையில் எடுத்துள்ள தேவஸ்தானம், லட்டு பிரசாதம் வழங்க பனை ஓலைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.. இந்த அறிவிப்பு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும்நிலையில், இனி அடுத்தடுத்த முன்னெடுப்புகளை தேவஸ்தானம் செயல்படுத்த போவதாக கூறப்படுகிறது.

சூப்பர் திட்டம்

சூப்பர் திட்டம்

அந்தவகையில், 2 முக்கிய அறிவிப்புகளை தேவஸ்தானம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.. அதில் ஒன்று அருங்காட்சியகம் அமைப்பதாகும்.. இந்த அருங்காட்சியகத்தில், 4,000 கலைப் பொருட்களுடன் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனராம்.. அதேபோல, வெங்கடாஜலபதி கோவில் உண்டியல் மூலம் கிடைத்த, அரிய வகை நாணயங்களைக் கொண்டு, அருங்காட்சியகம் அமைக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. உண்டியலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நாணயங்களையும், ரூபாய்களையும் காணிக்கையாக செலுத்துகின்றர்..

ஆட்டோமெட்டிக்

ஆட்டோமெட்டிக்

இதில், பல அரிய வகை நாணயங்களும் காணிக்கையாக போடப்பட்டவை. அவை கிட்டத்தட்ட 42 டன் நாணயங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளனவாம். இவைகளை பிரித்தாய்ந்து, அதன்பிறகு அருங்காட்சியகம் அமைப்பதற்கான வேலைகள் துவங்க உள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல, லட்டு தயாரிப்பை நவீனப்படுத்துதலிலும் தேவஸ்தானம் கவனத்தை திருப்பியுள்ளது.. இதற்காக டாடா பவுண்டேஷனும், ரிலையன்ஸ் குழுமமும் 50 கோடி ரூபாய் மதிப்பில் தானியங்கி இயந்திரங்களை வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளதாம்.. இதன்மூலம் லட்டுகளின் தரத்தையும், அளவையும் அதிகரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது..

காட்டேஜ்கள்

காட்டேஜ்கள்

மேலும், அங்குள்ள காட்டேஜ்களை புனரமைக்கும் வேலைகளை முடுக்கிவிடவும் தேவஸ்தானம் திட்டமிட்டு இருக்கிறதாம். ஏற்கனவே, காட்டேஜ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு, அது சலசலப்பாகி உள்ளதால், 100 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் வகையில் புதிதாக ஒரு வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இவையெல்லாமே இன்னும் ஒருவருட காலத்துக்குள் நிறைவேற்றவும் பிளான் செய்யப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளும் ஜரூராக துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+