திடீர் என்று திருப்பதி சென்ற முதல்வர் பழனிசாமி.. குடும்பத்தோடு சிறப்பு வழிபாடு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை தரிசனம் மேற்கொண்டார்.
ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை தரிசனம் மேற்கொண்டார்.
மத்திய பட்ஜெட் காரணமாக நாடு முழுக்க பரபரப்பில் இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியிலும் சிறுசிறு சலசலப்புகள் வந்து செல்கிறது. பாமக இளைஞரணி செயலாளர் எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் அடுத்த முதல்வர் என்று பாமக இப்போதே சொல்ல தொடங்கிவிட்டது.

அதேபோல் அதிமுக - பாஜக இடையிலும் சண்டை நிலவி வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை தரிசனம் மேற்கொண்டார்.
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சிறப்பு தரிசனம் நடைபெற்றது. அங்கு இதற்காக சிறப்பான அலங்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு இன்று சூரிய பிரபை சேவை நடைபெற்றது.
இது ஆட்சி அதிகாரம், சக்தி கொடுக்கும் வழிபாடு சேவையாகும். இதில் வழிபாடு நடத்தினால், ஆட்சி அதிகாரத்தில் பெரிய அளவில் யோகம் கிடைக்கும். இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
அதேபோல் கோவிலுக்குள் ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகனமான ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையில் கலந்து கொண்டார். அங்கு சுமார் 15 நிமிடம் முதல்வர் வழிபாடு செய்தார். முதல்வர் மட்டுமே அப்போது வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டார். ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வாங்கினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications