ஆஹா... அபாரம்.. தெலுங்கானாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் கேசிஆர்.. வரலாறு படைத்தார்!
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் தபால் ஓட்டுகள் எண்ணியதிலிருந்து முன்னிலை வகித்து வந்த ராஷ்ட்ரீய சமிதி கட்சி தற்போது 87 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் அக்கட்சியே இந்த முறை ஆட்சியை தக்க வைத்து கொள்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.
முதலில் வழக்கம் போல் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இந்த தபால் ஓட்டுகளில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை வகித்தது.
87 தொகுதிகளில்
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சிகளான ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
புதிய வரலாற்று
பெரும்பான்மைக்கு மொத்தம் 60 இடங்கள் தேவை. ஆனால் டிஆர்எஸ்ஸுக்கு அதைவிட அதிகமாகவே அக்கட்சி பெற்றுள்ளது. இதனால் சந்திரசேகர ராவ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. கடந்த தேர்தலை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் புதிய வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.
தற்கொலை
பாஜக படுதோல்வியால் பெரும் ஏமாற்றத்தை கண்டுள்ளது. சந்திரசேகர ராவின் ஆட்சியே தொடர வேண்டும் என அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
காணிக்கை
அவரது கடிதத்தில் சந்திரசேகர ராவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அது போல் இன்னொரு தொண்டர் தனது நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார். இத்தகைய பிரார்த்தனைகளும் அன்பும், கேசிஆரின் நலத்திட்டங்களும் வீண் போகவில்லை என மக்கள் நிரூபித்து காட்டிவிட்டனர்.