தெலுங்கானா: கேசிஆர்-க்கு வாழ்வா? சாவா?- ‘சுற்றி வளைத்த’ காங்கிரஸ்- கமரெட்டியில் மாநில தலைவர் போட்டி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அதி உச்ச பரபரப்பாக முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவை எதிர்த்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டி போட்டியிடக் கூடும் என்கிற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என்கின்றன சில கருத்து கணிப்புகள். ஆனால் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையக் கூடும்; பாஜக ஆதரவுடன் பிஆர்எஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் கஜ்வெல் மற்றும் கமரெட்டி தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக வெங்கட்ராமண் ரெட்டி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இன்று தமது வேட்பாளரை அறிவிக்கக் கூடும் என்கின்றன அக்கட்சி தகவல்கள்.
கமரெட்டி தொகுதிதான் இப்போது தெலுங்கானா தேர்தலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் முதல்வர் கேசிஆருக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு நடுவே முதல்வர் கேசிஆரை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி களமிறங்குவார் என்கின்றன அக்கட்சி தகவல்கள். இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். இத்தொகுதியில் காங்கிரஸின் ஷபீர் அலிதான் வேட்பாளர் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது ஷபீர் அலிக்கு நிஜாமாபாத் அர்பன் தொகுதி கொடுக்கப்பட இருக்கிறதாம். ரேவந்த் ரெட்டி லோக்சபா தொகுதி எம்.பியாக இருக்கிறார். கமரெட்டி தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனால் முதல்வர் கேசிஆருக்கு கமரெட்டி தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்கின்றன ஊடக தகவல்கள்.
கமரெட்டி நிலவரம்: 2012-ம் ஆண்டு முதல் கமரெட்டி தொகுதியில் பிஆர்எஸ் கட்சி வென்றுள்ளது. 8 முறை இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்குதேசம் கட்சியும் இங்கே அறுவடை செய்திருக்கிறது. 2018 தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 42.02% வாக்குகளையும் காங்கிரஸ் 39.21% வாக்குகளையும் இத்தொகுதியில் பெற்றிருந்தன. பாஜகவுக்கு வெறும் 9.52% வாக்குகள் கிடைத்திருந்தது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications