தெலுங்கானா தேர்தல்: சூடுபிடிக்கும் களம்.. பாஜக - நடிகர் பவன் கல்யாண் கட்சி இடையே உடன்பாடு
ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அறிவிப்போம் என பாஜக தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்க சாத்தியம் இல்லை என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இதனிடையே, தெலுங்கானாவில் பாஜகவுக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பாஜக எம்.பி லக்ஷமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்ஷமன் கூறுகையில், " பவன் கல்யாணுடன் நேற்று நானும் பாஜக தலைவர் கிஷன் ரெட்டியும் பேச்சுவார்த்தை நடத்தினோம். .
இதில் நாங்கள் ஒன்றாக போட்டியிடுவது என முடிவு செய்து இருக்கிறோம். இரு கட்சிகளின் இலக்குமே பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக பார்ப்பதுதான். லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என பவான் கல்யாண் தெரிவித்து இருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications