தெலுங்கானாவில் தமிழ்நாடு மாடல்.. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்த கேசிஆர் அரசு! செம
ஹைதராபாத்: தமிழ்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளதைப் போல நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் இப்போது காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூர கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அதன் பிறகு இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.
தெலுங்கானா: அதன்படி கடந்தாண்டு செப். மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இது விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது. நாடு முழுக்க இருந்தும் பலரும் இத்திட்டத்தை வரவேற்றனர். இதற்கிடையே இத்திட்டம் குறித்துத் தெரிந்து கொள்ளத் தெலுங்கானா அரசு அதிகாரிகளும் கூட சமீபத்தில் சென்னை வந்தனர்.
தமிழ்நாட்டில் அமல்படுத்தும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து அவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கிடையே தெலுங்கானாவிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 24 முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்: மாணவர்களுக்குத் தசரா பரிசாக இந்த "முதலமைச்சரின் காலை உணவு" திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநிலத்தை ஆளும் கேசிஆர் கட்சியினர் கூறுகின்றனர். இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.400 கோடியைத் தெலுங்கானா அரசு செலவிட உள்ளது. இது குறித்த அரசாணையைத் தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், சத்தான காலை உணவைப் பெறுவதை இந்தத் திட்டம் உறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் அனுபவம் மேம்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்யவும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கவும், இந்த காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்குவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தகவல்: சமீபத்தில் தமிழ்நாட்டிற்குத் தெலுங்கானா அரசு அதிகாரிகள் சென்று திரும்பிய நிலையில், இந்தத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தெலுங்கானா அதிகாரிகள் கூறுகையில், "சமீபத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தெலுங்கானா அரசு அதிகாரிகள் சென்று வந்தனர். அதைத் தொடர்ந்தே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தால் மாநிலத்தின் நிதிச் சுமை அதிகரிக்கும். இருப்பினும் செலவைக் கருத்தில் கொள்ளாமல், இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்" என்று அவர் தெரிவித்தார்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications