சாம்பார் சாதம் கணவனுக்கு.. குழந்தைகளுக்கு தயிர் சாதம்.. ஆடிப்போன தெலுங்கானா.. அப்படி என்னாச்சு
ஹைதராபாத்: புரிதல் இல்லாத ஒரே காரணத்துக்காக, அநியாயமாக உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன.. குறிப்பாக இளம் தம்பதிகளிடம் இப்படியான புரிதல் இல்லாததால் விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த துயரம் ஒன்று, பொதுமக்களிடையே வருத்தத்தையும், கலக்கத்தையும் தந்து வருகிறது.
சமீப காலமாகவே, குடும்ப வன்முறைகளும் பெருகி வருகின்றன. குடும்ப உறவுகள் வலுப்பட வேண்டும் என்பதற்காக, தம்பதியின ஒற்றுமை, குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் நீதிமன்றங்கள் அதிக மிகுந்த அக்கறையை செலுத்துகிறது என்றாலும், உறவுகள் சிதைந்து, உயிர்களும் பிரியும் நிலைமை வந்துவிடுகிறது.
இதோ தெலங்கானா மாநிலத்திலும் ஒரு துயரம் நடந்துள்ளது.. சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள ராகவேந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் சென்னைய்யா. இவரது மனைவி பெயர் ரஜிதா.

குடும்ப தகராறு
இவர்களுக்கு சாய்கிருஷ்ணா(12), கவுதம்(8), மகள் மதுபிரியா(10) என்று 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.. சமீப காலமாகவே தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறும், பிரச்சனையும் ஏற்பட்டு வந்துள்ளது. தினம் தினம் சண்டையால் மனம் நொந்துபோன ரஜிதா, பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்வதென்று முடிவு செயதார்..
இதற்காக சென்னைய்யாவுக்கு சாம்பார் சாதம் சமைத்து தந்திருக்கிறார்.. பிறகு, ரஜிதா குழந்தைகளுக்கு தயிர் சாதம் கலந்தார். அதில், விஷத்தையும் கலந்து தந்ததாக தெரிகிறது. இதே தயிர் சாதத்தை ரஜிதாவும் சாப்பிட்டார்.. குழந்தைகளுக்கு தயிர் சாதம் ஊட்டியதுமே, சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் அடைந்தனர். ரஜிதாவும் மயங்கி விழுந்தார்.
திடீரென நேர்ந்த துயரம்
இதைப்பார்த்து பதறிப்போன சென்னையா, உடனடியாக 4 பேரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்தார். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அந்த 3 குழந்தைகளும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.. இப்போது ரஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், 3 குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். ரஜிதாவிடம் இதுகுறித்த விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications