பசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை பலியான பரிதாபம்.. ஆந்திராவில் சோகம்!
ஹைதராபாத்: ஆந்திராவில் பசிதாங்க முடியாமல் மண்ணை தின்ற 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவாக மாறினாலும் பசியின் கொடுமையால் தவிப்பவர்களின் கூட்டம் ஒருபுறம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பல கோடிகளை வாரி இறைத்து பகட்டுக்காக பல்சுவை உணவுடன் ஆடம்பரமாக திருமணம் ஒருபுறம் நடக்க ஒரு வேலை சோற்றுக்கே வழியில்லாம் மரணத்தை சந்திக்கும் மக்களும் நாட்டில் உள்ளனர்.
அப்படி உணவின்றி பசியால் இறந்து போன 2 வயது குழந்தையின் மரணம்தான் பல மனங்களை உலுக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.
ஒடிசாவில் ஃபனி புயலுக்கு நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபனி என பெயர்சூட்டிய மக்கள்
4 குழந்தைகள்
அனந்தபூர் குதிபண்டலா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் - நீலவேணி தம்பதி. கடும் வறுமையில் வாடும் இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
சகோதரியின் குழந்தை
இந்நிலையில், நீலவேணி தனது சகோதரியின் 2 வயது குழந்தையையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளார். சில நாட்களாக ஒரு வேளை உணவு கூட இல்லாமல் நீலவேணி குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர்.
மண்ணை தின்ற குழந்தை
நீலவேணியின் குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்த குழந்தைகள் என்பதால் பசியை தாங்கிக்கொண்டனர். ஆனால் நீலவேணியின் சகோதரியின் 2 வயது குழந்தை பசியயை தாங்கிக்கொள்ள முடியாமல் மண்ணை தின்றுள்ளது.
குழந்தை மரணம்
தொடர்ந்து பசியால் மண்ணை சாப்பிட்ட அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனால் பதறிய நீலவேணியும் அவரது கணவரும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்துள்ளனர்.
காப்பகத்தில் ஒப்படைப்பு
தகவலறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த வருடம் அவர்களது மூன்றாவது குழந்தையும் பசியால் மண்ணை தின்று உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களிடமிருந்த 4 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பெரும் சோகம்
மேலும் மகேஷ் - நீலவேணி தம்பதிக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர். பசிக்கொடுமையால் மண்ணை தின்று 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.