Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ஹீரோ.. தெலங்கானா காங்கிரஸ் வெற்றிக்கு இவங்க தான் காரணம்! அட தமிழக எம்பி இருக்காரே! செய்தது என்ன

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இன்று வெளியான ரிசல்ட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கு பின்னணியில் உள்ள 3 முக்கிய நபர்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் என்பது நடந்தது. மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனியே ஓட்டுப்பதிவுகள் நடந்தது. இதில் மிசோராம் தவிர பிற 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

Which 3 people to be credited with Congress victory in Telangana? details here

இதில் மத்திய பிரதேசத்தில் இமாலய வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடைந்துள்ளது. இதுதவிர ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்த நிலையில் தற்போது இருமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இப்படி வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசியுள்ள நிலையில் தென்மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு புதிதாக உருவான தெலங்கானாவில் முதல் 2 சட்டசபை தேர்தல்களில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அவர் முதல்வாக நீடித்து வந்தார். இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது.

இதில் 71 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 60 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தோற்ற நிலையில் தெலுங்கானாவில் அந்த கட்சி வெற்றி பெற்றது எப்படி? என பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அதாவது தெலுங்கானா தேர்தல் வெற்றியின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 3 ஹீரோக்கள் உள்ளனர். அது யார் என்றால் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல்.

அதாவது புதிய மாநிலமாக ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகள் சிதைந்தன. அதோடு தெலுங்கானாவை புதிய மாநிலமாக உருவாக்க போராட்டம், உண்ணாவிரதம் நடத்திய நிலையில் சந்திரசேகர் ராவ் முதல் 2 தேர்தல்களில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திறமையான தலைவர் இல்லாத நிலை இருந்தது.

இதற்கிடையே தான் கடந்த 2017 ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேவந்த் ரெட்டி காங்கிரஸில் இணைந்தார். இவரது தலைமை பண்பை அறிந்த காங்கிரஸ் கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கானா மாநில தலைவராக நியமனம் செய்தது. இதையடுத்து தான் ரேவந்த் ரெட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்தார். அதோடு தொடக்கத்தில் கட்சியில் அவருக்கு எதிராக சிலர் செயல்பட்ட நிலையில் சிலர் விலகினர். இருப்பினும் மனம் தளராமல் அவர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார். அதோடு ஆண்ட சந்திரசேகரராவ் மற்றும் அவரது கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் எடுத்து கூறி போராட்டங்களை நடத்தினார். இவர் முதல் ஹீரோவாக இருக்கிறார்.

அடுத்ததாக 2வது ஹீரோ மாணிக்கம் தாகூர். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கடந்த ஆண்டு வரை நீடித்தார். இந்த வேளையில் அவர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து இணக்கமாக செயல்பட்டார். இந்த வேளையில் வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் ரேவந்த் ரெட்டியை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலித்தது. ஆனால் மாணிக்கம் தாகூர் அதனை செய்யவே இல்லை. இறுதியாக கடந்த ஆண்டு அவர் தெலங்கானா மேலிட பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்து கோவா பொறுப்பாளராக மாறினார். ரேவந்த் ரெட்டியை மாற்றாமல் இருந்ததால் தான் இன்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மாணிக்கம் தாகூர் 2வது ஹீரோவாக உள்ளார்.

இதில் 3வது ஹீரோ சுனில் கணுகோல். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர். இவர் தான் காங்கிரஸ் கட்சியின் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார். தெலுங்கானா தேர்தலிலும் இவர் பல அறிவுரைகளை காங்கிரஸ் கட்சிக்கு வகுத்து கொடுத்து இருந்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியும் அதனை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சுனில் கணுகோல் 3வது ஹீரோவாக உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+