கபினி, கேஆர்எஸ்ஸில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. காவிரியில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Recommended Video

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை தாண்டியுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை தாண்டியுள்ளது. இன்னு சில மணி நேரத்தில் 90 அடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது இதனால் கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 56,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இரண்டும் சேர்த்து காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82.5 அடியாக உள்ளது. வெளியேற்றும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது. 10 மாதத்திற்கு பின் மேட்டூரில் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.
விரைவில் மேட்டூர் அணை 90 அடியை எட்டும் என கூறப்படுகிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது . அணையின் நீர் இருப்பு 45.48 டிஎம்சியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications