நிர்பயா சம்பவத்திற்கு பிறகும் திருந்தாத டெல்லி: 2014ல் 1,900 பலாத்கார வழக்குகள்
டெல்லி: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் டெல்லியில் 1,900 பாலியல் பலாத்கார வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 29ம் தேதி உயிர் இழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து பல தந்தைகள் தங்கள் மகள்களை டெல்லிக்கு அனுப்ப அஞ்சுகிறார்கள்.

நிர்பயா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறைந்தபாடில்லை, மாறாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் டெல்லியில் 1,900 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிர்பயா சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்கள் குறித்து துணிச்சலாக புகார் தெரிவிக்குமாறு தாங்கள் பெண்களை கேட்டுக் கொண்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி பல பெண்கள் துணிந்து புகார் தெரிவித்தாலும் பலர் புகார் அளிக்க இன்னும் அஞ்சத் தான் செய்கிறார்கள்.
போலீசார் பதிவு செய்த பலாத்கார வழக்குள் தான் 1,900. பதிவு செய்யப்படாத வழக்குகள் எத்தனையோ?












Click it and Unblock the Notifications